அகநானூறு - 313. பாலை
'இனிப் பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு!' என அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம் பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும், குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க, ஐய ஆக வெய்ய உயிரா, |
5 |
இரவும் எல்லையும் படர் அட வருந்தி, அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப, தம் அலது இல்லா நம் இவண் ஒழிய, பொருள் புரிந்து அகன்றனர்ஆயினும், அருள் புரிந்து, வருவர் வாழி, தோழி! பெரிய |
10 |
நிதியம் சொரிந்த நீவி போலப் பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை, நீங்கா வம்பலர் கணை இடத் தொலைந்தோர் வசி படு புண்ணின் குருதி மாந்தி, ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல, |
15 |
இல் வழிப் படூஉம் காக்கைக் கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 313. பாலை , பாலை, இலக்கியங்கள், அகநானூறு, தோழி, புரிந்து, சங்க, எட்டுத்தொகை