அகநானூறு - 305. பாலை
பகலினும் அகலாதாகி, யாமம் தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழிய, தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு பனி மீக்கூரும் பைதல் பானாள், பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை, |
5 |
பருகுவன்ன காதலொடு திருகி, மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து, ஓர் உயிர் மாக்களும் புலம்புவர்மாதோ; அருளிலாளர் பொருள்வயின் அகல, எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து |
10 |
யான் எவன் உளெனோ தோழி! தானே பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய், ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய, உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக் கனை எரி பிறப்ப ஊதும் |
15 |
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே? |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 305. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, தோழி, எட்டுத்தொகை, சங்க