அகநானூறு - 304. முல்லை
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை, நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல், சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று, குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை, |
5 |
செய்து விட்டன்ன செந் நில மருங்கில், செறித்து நிறுத்தன்ன தௌ அறல் பருகி, சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை, வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு, அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய, |
10 |
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ, அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல் மணி மிடை பவளம் போல, அணி மிகக் காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப, |
15 |
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை, 'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும் அறவர்அல்லர், நம் அருளாதோர்' என, நம் நோய் தன்வயின் அறியாள், |
20 |
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே? |
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 304. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, துளி, எட்டுத்தொகை, சங்க