அகநானூறு - 30. நெய்தல்
நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை, |
5 |
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ, அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி, பெருங் களம் தொகுத்த உழவர் போல, இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி, பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி, |
10 |
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ! பெருமை என்பது கெடுமோ ஒரு நாள் மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத் தண் நறுங் கானல் வந்து, 'நும் வண்ணம் எவனோ?' என்றனிர் செலினே? |
15 |
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 30. நெய்தல் , இலக்கியங்கள், அகநானூறு, நெய்தல், திணி, பாடு, சங்க, எட்டுத்தொகை