அகநானூறு - 290. நெய்தல்
குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை, இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர், நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென, அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது, |
5 |
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென, அம் கண் பெண்ணை அன்புற நரலும் சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச் சேர்ப்பன், கழி சேர் புன்னை அழி பூங் கானல், தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம் |
10 |
மணவா முன்னும் எவனோ தோழி! வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன் தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை, சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல் மணி ஏர் மாண் நலம் ஒரீஇ, |
15 |
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே? |
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்,தலைமகள் சொல்லியது. - நக்கீரர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 290. நெய்தல் , இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, எட்டுத்தொகை, சங்க