அகநானூறு - 286. மருதம்
வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை, வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க; மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ, காஞ்சி நீழல், தமர் வளம் பாடி, ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த |
5 |
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின் தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர! விழையா உள்ளம் விழையும் ஆயினும், என்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு, ஆங்கு, அறனும் பொருளும் வழாமை நாடி, |
10 |
தற் தகவு உடைமை நோக்கி, மற்று அதன் பின் ஆகும்மே, முன்னியது முடித்தல்; அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால், அரிய பெரியோர்த் தெரியுங்காலை, நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன |
15 |
பொய்யொடு மிடைந்தவை தோன்றின், மெய் யாண்டு உளதோ, இவ் உலகத்தானே? |
'வரைந்து எய்துவல்' என்று நீங்கும் தலைமகன், 'தலைமகளை ஆற்றுவித்துக் கொண் டிருத்தல் வேண்டும்' என்று தோழியைக் கைப்பற்றினாற்கு, கைப்பற்றியது தன்னைத தொட்டுச் சூளுறுவானாகக் கருதி, சொல்லியது. - ஓரம்போகியார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 286. மருதம் , இலக்கியங்கள், அகநானூறு, மருதம், சினை, வயின், சங்க, எட்டுத்தொகை