அகநானூறு - 276. மருதம்
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த வாளை வெண் போத்து உணீஇய, நாரை தன் அடி அறிவுறுதல் அஞ்சி, பைபயக் கடி இலம் புகூஉம் கள்வன் போல, சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு |
5 |
ஆவது ஆக! இனி நாண் உண்டோ? வருகதில் அம்ம, எம் சேரி சேர! அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண, தாரும் தானையும் பற்றி, ஆரியர் பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல, |
10 |
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து, அவன் மார்பு கடி கொள்ளேன்ஆயின், ஆர்வுற்று இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல், பரந்து வெளிப்படாது ஆகி, வருந்துகதில்ல, யாய் ஓம்பிய நலனே! |
15 |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 276. மருதம் , இலக்கியங்கள், மருதம், அகநானூறு, அவன், எட்டுத்தொகை, சங்க