அகநானூறு - 275. பாலை
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி, குடை அடை நீரின் மடையினள் எடுத்த பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி, இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி! 'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என, |
5 |
யாம் தற் கழறுங் காலை, தான் தன் மழலை இன் சொல், கழறல் இன்றி, இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல் பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள், ஏதிலாளன் காதல் நம்பி, |
10 |
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக் குருளை எண்கின் இருங் கிளை கவரும் வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய, இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம், நெருநைப் போகிய பெரு மடத் தகுவி |
15 |
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும் கூழை நொச்சிக் கீழது, என் மகள் செம் புடைச் சிறு விரல் வரித்த வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே? |
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 275. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, இவண், எட்டுத்தொகை, சங்க