அகநானூறு - 246. மருதம்
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக, நெடு நீர்ப் பொய்கைத் துணையொடு புணரும் மலி நீர் அகல் வயல் யாணர் ஊர! போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு |
5 |
தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு ஆடினை என்ப, நெருநை; அலரே காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணிவாயில், சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் |
10 |
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய, பதினொரு வேளிரொடு வேந்தர் சாய, மொய் வலி அறுத்த ஞான்றை, தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே. |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 246. மருதம் , இலக்கியங்கள், மருதம், அகநானூறு, அகல், எட்டுத்தொகை, சங்க