அகநானூறு - 245. பாலை
'உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார் நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்' என மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி, மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில், |
5 |
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை வல் வில் இளையர் தலைவர், எல் உற, வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை, அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில், மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள் |
10 |
கான யானை வெண் கோடு சுட்டி, மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும் அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற, நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக் |
15 |
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண், குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் கல் நெடுங் கவலைய கானம் நீந்தி, அம் மா அரிவை ஒழிய, |
20 |
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே. |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறி, தலைமகன் சொல்லி, செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 245. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, அல்கு, பொருள், சங்க, எட்டுத்தொகை