அகநானூறு - 242. குறிஞ்சி
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச் சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை, பைந் தாட் செந் தினைக் கொடுங் குரல் வியன் புனம், |
5 |
செந் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன் பண்பு தர வந்தமை அறியாள், 'நுண் கேழ் முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு அறிதல் வேண்டும்' என, பல் பிரப்பு இரீஇ, அறியா வேலற் தரீஇ, அன்னை |
10 |
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி, மறி உயிர் வழங்கா அளவை, சென்று யாம், செல வரத் துணிந்த, சேண் விளங்கு, எல் வளை நெகிழ்ந்த முன் கை, நேர் இறைப் பணைத் தோள், நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய, |
15 |
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க, பல் ஊழ் முயங்கல் இயைவதுமன்னோ தோழி! நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில் பெரு மலை விடரகம் நீடிய சிறியிலைச் சாந்த மென் சினை தீண்டி, மேலது |
20 |
பிரசம் தூங்கும் சேண் சிமை வரையக வெற்பன் மணந்த மார்பே! |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பேரிசாத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 242. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, வியன், எழில், சேண், தோழி, செந், புரை, எட்டுத்தொகை, சங்க, மென், நுண்