அகநானூறு - 241. பாலை
'துனி இன்று இயைந்த துவரா நட்பின் இனியர் அம்ம, அவர்' என முனியாது நல்குவர் நல்ல கூறினும், அல்கலும், பிரியாக் காதலொடு உழையர் ஆகிய நமர்மன் வாழி, தோழி! உயர்மிசை |
5 |
மூங்கில் இள முளை திரங்க, காம்பின் கழை நரல் வியல் அகம் வெம்ப, மழை மறந்து அருவி ஆன்ற வெருவரு நனந்தலை, பேஎய் வெண் தேர் பெயல் செத்து ஓடி, தாஅம் பட்ட தனி முதிர் பெருங் கலை |
10 |
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது, அலங்குதலை விருந்தின் வெங் காட்டு வருந்தி வைகும் அத்த நெல்லித் தீஞ் சுவைத் திரள் காய் வட்டக் கழங்கின் தாஅய், துய்த் தலைச் செம் முக மந்தி ஆடும் |
15 |
நல் மர மருங்கின் மலை இறந்தோரே! |
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 241. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க