அகநானூறு - 235. பாலை
அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும், சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ? பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து, விண்டு முன்னிய கொண்டல் மா மழை |
5 |
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப, வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ, சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய, |
10 |
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல் கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ மாரி அம் குருகின் ஈரிய குரங்க, நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி, பனி கடி கொண்ட பண்பு இல் வாடை |
15 |
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய, 'நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு தொல் நலம் சிதையச் சாஅய், என்னள்கொல் அளியள்?' என்னாதோரே. |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 235. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, வான், எட்டுத்தொகை, சங்க