அகநானூறு - 234. முல்லை
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை, நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின், நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப் புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய, வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய |
5 |
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப, கால் என மருள, ஏறி, நூல் இயல் கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர் வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந! ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை |
10 |
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள, அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத, எல்லை போகிய புல்லென் மாலை, புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர், |
15 |
கழி படர் உழந்த பனி வார் உண்கண் நல் நிறம் பரந்த பசலையள் மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே. |
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 234. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, பரந்த, எட்டுத்தொகை, சங்க