அகநானூறு - 226. மருதம்
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்; நாண் இலை மன்ற யாணர் ஊர! அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை, குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின், பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக் |
5 |
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும், வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான், பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை, நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய, விடியல் வந்த பெரு நீர்க் காவிரி, |
10 |
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள், வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த் தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப் பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி, |
15 |
போர் அடு தானைக் கட்டி பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே. |
தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 226. மருதம், இலக்கியங்கள், நாள், அகநானூறு, மருதம், பாடு, எட்டுத்தொகை, வெண், தொடி, சங்க