அகநானூறு - 221. பாலை
நனை விளை நறவின் தேறல் மாந்தி, புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ, 'பொம்மல் ஓதி எம் மகள் மணன்' என, வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால், புதுவது புனைந்த சேயிலை வெள் வேல், |
5 |
மதி உடம்பட்ட மை அணற் காளை வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து, தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு, நின் தண் நறு முச்சி புனைய, அவனொடு கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை, |
10 |
களிற்று இரை பிழைத்தலின், கய வாய் வேங்கை காய் சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ, இரும் பிடி இரியும் சோலை அருஞ் சுரம் சேறல் அயர்ந்தனென், யானே. |
தலைமகற்குப் போக்கு உடன்பட்ட தோழி தலைமகட்குப் போக்கு உடன்படச் சொல்லியது. - கயமனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 221. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, போக்கு, எட்டுத்தொகை, சங்க