அகநானூறு - 204. முல்லை
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை, கடல் போல் தானை, கலிமா, வழுதி வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச் சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில், |
5 |
கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப, உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து, செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர் வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை |
10 |
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும் காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித் தண்டலை கமழும் கூந்தல், ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே. |
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 204. முல்லை , முல்லை, இலக்கியங்கள், வினை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க