அகநானூறு - 167. பாலை
வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின் பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை, விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே இனிது உடன் கழிந்தன்றுமன்னே; நாளைப் |
5 |
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச் சேக்குவம்கொல்லோ, நெஞ்சே! சாத்து எறிந்து அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக் கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ, ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ், |
10 |
முருங்கை மேய்ந்த பெருங் கை யானை வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென, மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று |
15 |
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப் பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில், குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க் கூர் முகச் சிதலை வேய்ந்த போர் மடி நல் இறைப் பொதியிலானே? |
20 |
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது. -கடியலூர் உருத்திரங்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 167. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, காழ், எட்டுத்தொகை, சங்க