அகநானூறு - 162. குறிஞ்சி
கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து அளப்பு அரிது ஆகிய குவை இருந் தோன்றல, கடல் கண்டன்ன மாக விசும்பின் அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க, கடிதுஇடி உருமொடு கதழ்உறை சிதறி, |
5 |
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடு நாள், அருங் கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி, பனி மயங்கு அசைவளி அலைப்ப, தந்தை நெடு நகர் ஒரு சிறை நின்றனென்ஆக; அறல் என அவிர்வரும் கூந்தல், மலர் என |
10 |
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண், முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய், கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி, கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது, |
15 |
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய நசை பிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன் கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின் வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, |
20 |
வில் கெழு தானைப் பசும் பூண் பாண்டியன் களிறு அணி வெல் கொடி கடுப்ப, காண்வர ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி, நேர் கொள் நெடு வரைக் கவாஅன் சூரரமகளிரின் பெறற்கு அரியோளே. |
25 |
இரவுக் குறிக்கண் தலைமகளைத் கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 162. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, கெழு, அகநானூறு, நெடு, சங்க, எட்டுத்தொகை