அகநானூறு - 159. பாலை
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை உரனுடைச் சுவல பகடு பல பரப்பி உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின், வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர் |
5 |
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி, பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர், கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி, உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும் |
10 |
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி! விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது வில் கெழு தடக் கை வெல் போர் வானவன் |
15 |
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத் தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி, கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில் சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும், ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின் |
20 |
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஆமூர்க் கவுதமன் சாதேவனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 159. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, தோழி, சேண், நெடு, கொடு, எட்டுத்தொகை, சங்க, வில்