அகநானூறு - 152. குறிஞ்சி
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து, குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண் செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை, 5 சினம் கெழு தானை, தித்தன் வெளியன், |
5 |
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை, தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும் சிறு வெள் இறவின் குப்பை அன்ன உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன் முனை முரண் உடையக் கடந்த வென் வேல், |
10 |
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ், பாரத்துத் தலைவன், ஆர நன்னன்; ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில் களி மயிற் கலாவத்தன்ன. தோளே வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி |
15 |
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த கடவுட் காந்தளுள்ளும், பல உடன் இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி, வல்லினும், வல்லார்ஆயினும், சென்றோர்க்குச் சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும், |
20 |
மாஅல் யானை ஆஅய் கானத்துத் தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல் வேய் அமைக் கண் இடை புரைஇ, சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே. |
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 152. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, வந்து, நடுங்கு, சங்க, எட்டுத்தொகை