அகநானூறு - 151. பாலை
'தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ, நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!' என, மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு |
5 |
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக் கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த கோடல்அம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில் தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள் அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும் |
10 |
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல், கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு உறுவது கூறும், சிறு செந் நாவின் மணி ஓர்த்தன்ன தெண் குரல் கணி வாய், பல்லிய காடு இறந்தோரே! |
15 |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-காவன்முல்லைப் பூதரத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 151. பாலை, இலக்கியங்கள், அகநானூறு, பாலை, கால், நயந்து, சங்க, எட்டுத்தொகை