அகநானூறு - 147. பாலை
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த, துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென, |
5 |
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் நெறி படு கவலை நிரம்பா நீளிடை, வெள்ளி வீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே; பல புலந்து, |
10 |
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், தோளும் தொல் கவின் தொலைய, நாளும் பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி, மருந்து பிறிது இன்மையின், இருந்து வினைஇலனே! |
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - அவ்வையார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 147. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, செலவு, கோட்டு, சங்க, எட்டுத்தொகை