ஐங்குறுநூறு - 47. தோழி வற்புறுத்த பத்து
வேந்துவிடு விழுத்தொழில் எய்தி ஏந்துகோட்டு அண்ணல் யானை அரசுவிடுத்து இனியே எண்ணிய நாள்அகம் வருதல் பெண்ணியல் காமர் சுடர்நுதல் விளங்கும் தேமொழி அரிவை தெளிந்திசின் யானே. | 466 |
புனைஇழை நெகிழச் சாஅய் நொந்துநொந்து இனையல் வாழியோ இகுளை வினைவயின் சென்றோர் நீடினர் பெரிதெனத் தங்காது நம்மினும் விரையும் என்ப வெம்முரண் யானை விறல்போர் வேந்தே. | 467 |
வரிநுணல் கறங்கத் தேரை தெவிட்டக் கார்தொடங் கின்றே காலை இனிநின் நேர்இறை பணைத்தோட்கு ஆர்விருந் தாக வருவர் இன்றுநம் காத லோரே. | 468 |
பைந்தினை உணங்கல் செம்பூழ் கவரும் வன்புல நாடன் தரீஇய வலன்ஏர்ப்பு அம்கண் இருவிசும்பு அதிர ஏறொடு பெயல்தொடங் கின்றே வானம் காண்குவம் வம்மோ பூங்க ணோயே. | 469 |
இருநிலம் குளிர்ப்ப வீசி அல்கலும் அரும்பனி அளை இய அற்சிரக் காலை உள்ளார் காதல ராயின் ஒள்ளிழை சிறப்பொடு விளங்கிய காட்சி மறக்க விடுமோநின் மாமைக் கவினே. | 470 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 47. தோழி வற்புறுத்த பத்து, இலக்கியங்கள், தோழி, ஐங்குறுநூறு, வற்புறுத்த, பத்து, கின்றே, காலை, எட்டுத்தொகை, சங்க, யானை