ஐங்குறுநூறு - 43. விரவுப் பத்து
வென்வேல் வேந்தன் அருந்தொழில் துறந்தினி நன்னுதல் யானே செலஒழிந் தனனே முரசுபாடு அதிர ஏவி அரசுபடக் கடக்கும் அருஞ்சமத் தானே. | 426 |
பேரமர் மலர்க்கண் மடந்தை நீயே காரெதிர் ஒழுதென விடல்ஒல் லாயே போருடை வேந்தன் பாசறை வாரான் அவனெனச் செலவழுங் கினனே. | 427 |
தேர்செல அழுங்கத் திருவில் கோலி ஆர்கலி எழிலி சோர்தொடங் கின்றே வேந்துவிடு விழுத்தொழில் ஒழிய யாந்தொடங் கின்னால் நின்புரந் தரலே. | 428 |
பல்லிருங் கூந்தல் பசப்பு நீவிடின் செல்வேம் தில்ல யாமே செற்றார் வெல்கொடி அரணம் முருக்கிய கல்லா யானை வெந்துபகை வெலற்கே. | 429 |
நெடும்பொறை மிசைய குறுங்கால் கொன்றை அடர்பொன் என்னச் சுடரிதழ் பகரும் கான்கெழு நாடன் மகளோ அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே. | 430 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 43. விரவுப் பத்து, இலக்கியங்கள், விரவுப், ஐங்குறுநூறு, பத்து, வேந்தன், எட்டுத்தொகை, சங்க