ஐங்குறுநூறு - 33. இடைச்சுரப் பத்து.
உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை அலறுதலை ஓமை அம்கவட் டேறிப் புலம்புகொள விளிக்கும் நிலம்காய் கானத்து மொழிபெயர் பன்மலை இறப்பினும் ஒழிதல் செல்லாது ஒண்டொடி குணனே. | 321 |
நெடுங்கழை முனிய வேனில் நீடிக் கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் வெய்ய வாயினை முன்னே இனியே ஒண்ணுதல் அரிவையை யுள்ளுதொறும் தண்ணிய வாயின சுரட்திடை யாறே. | 322 |
வள்ளெயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக் கள்ளியங் கடத்தினைக் கேழல் பார்க்கும் வெஞ்சுரக் கவலை நீந்தி வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே. | 323 |
எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடைச் சிறிதுகண் படுப்பினும் காண்குவென் மன்ற நள்ளென் கங்குல் நளிமனை நெடுநகர் வேங்கை வென்ற சுணங்கின் தம்பாய் கூந்தல் மாஅ யோளே. | 324 |
வேணில் அரையத்து இலையொலி வெரீஇப் போகில் புகாவுண்ணாது பிறிதுபுலம் படரும் வெம்பலை அருஞ்சுரம் நலியாது எம்வெம் காதலி பண்புதுணைப் பெற்றே. | 325 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 33. இடைச்சுரப் பத்து., இலக்கியங்கள், இடைச்சுரப், ஐங்குறுநூறு, பத்து, சங்க, எட்டுத்தொகை