ஐங்குறுநூறு - 32. செலவுப் பத்து
பொன்செய் பாண்டில் பொலங்கலம் நந்தத் தேரகல் அல்குல் அவ்வரி வாட இறந்தோர் மன்ற தாமே பிறங்குலைப் புல்லரை ஓமை நீடிய புலிவழங்கு அதர கானத் தானே. | 316 |
சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப் பைதற வெந்த பாலை வெங்காட்டு அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச் சென்ர நெஞ்சம் நீடிய பொருளே. | 317 |
ஆய்நலம் பசப்ப அரும்படர் நலிய வேய்மருள் பணைத்தோள் வில்லிலை நெகிழ நசைநனி கொன்றோர் மன்ற இசைநிமிர்ந்து ஓடெரி நடந்த வைப்பின் கோடுயர் பிறங்கல் மலை இறந் தோரே. | 318 |
கண்பொர விளங்கிய கதிர்தெறு வைப்பின் மண்புரை பெருகிய மரம்முளி கானம் இறந்தன ரோநம் காதலர் மறந்தன ரோதில் மறவா நம்மே. | 319 |
முள்ளரை இலவத்து ஒள்ளினர் வான்பூ முழங்கல் அசைவளி எடுப்ப வானத்து உருமுப்படு கனலின் இருநிலத்து உறைக்கும் கவலை அருஞ்சுரம் போயினர் தவலில் அருநோய் தலைதந் தோரே. | 320 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 32. செலவுப் பத்து, இலக்கியங்கள், பத்து, ஐங்குறுநூறு, செலவுப், அருஞ்சுரம், வைப்பின், தோரே, நீடிய, இறந்தோர், எட்டுத்தொகை, சங்க, மன்ற