ஐங்குறுநூறு - 22. அன்னாய்ப் பத்து
நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன வயலையஞ் சிலம்பின் தலையது செயலையம் பகைத்தழி வாடும் அன்னாய். | 211 |
சாந்த மரத்ட பூதிழ் எழுபுகை கூட்டுவிரை கமழும் நாடன் அறவற்கு எவனோ நாமக்ல்வு அன்னாய் | 212 |
நறுவடி மாஅத்து மூக்கிறுபு உதிர்த்த ஈர்ந்தண் பெருவடுப் பாலையிற் குறவர் உறைவீழ் ஆலியல் தொகுக்கும் சாரல் மீமிசை நன்னாட் டவர்வரின் யானுயிர் வாழ்தல் கூடும் அன்னாய். | 213 |
சாரல் பலவின் கொழுந்துணர் நறும்பழம் இருங்கள் விடரளை வீழ்ந்தென வெற்பில் பெருந்தேன் இறாஅல் கீறும் நாடன் பேரமர் மழைக்கண் கழிலத்தன் சீருடை நன்னாட்டுச் செல்லும் அன்னாய். | 214 |
கட்டளை யன்ன மணிநிறத் தும்பி இட்டிய குயின்ற துறைவயின் செலீஇயர் தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர் தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும் புதன்மலர் மாலையும் பிரிவோர் இதனினும் கொடிய செய்குவர் அன்னாய். | 215 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 22. அன்னாய்ப் பத்து, அன்னாய், இலக்கியங்கள், அன்னாய்ப், ஐங்குறுநூறு, பத்து, சாரல், நாடன், சங்க, எட்டுத்தொகை