ஐங்குறுநூறு - 21. அன்னாய் வாழிப் பத்து
அன்னாய் வாழிவேண் டன்னை உவக்காண் மாரிக் குளத்துக் காப்பாள் அன்னன் தூவலின் நனைந்த தொடலை ஒள்வாள் பாசி சூழ்ந்த பெருங்கழல் தண்பனி வைகிய வைக்கச் சினனே. | 206 |
அன்னாய் வாழிவேண் டன்னை நன்றும் உணங்கல கொல்லோநின் தினையே உவக்காண் நிணம்பொதி வழுக்கில் தோன்றும் மழைத்தலை வைத்துஅவர் மணிநெடுங் குன்றே. | 207 |
அன்னாய் வாழிவேண் டன்னை கானவர் கிழங்ககழ் நெடுங்குழி மல்க வேங்கைப் பொன்மலி புதுவீத் தாஅம் அவர் நாட்டு மணிநிற மால்வரை மறைதொறு அணிமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே. | 208 |
அன்னாய் வாழிவேண் டன்னை நீமற்று யான்அவர் மறத்தல் வேண்டுதி யாயின் கொண்டல் அவரைப் பூவின் அன்ன வெண்டலை மாமழை சூடித் தோன்றல் அனாதுஅவர் மணிநெடுங் குன்றே. | 209 |
அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பை புலவுச்சேர் துறுகல் ஏறி அவர்நாட்டுப் பூக்கெழு குன்றம் நோக்கி நின்று மணிபுரை வயங்கிழமை நிலைபெறத் தணிதற்கும் உரித்துஅவள் உற்ற நோயே. | 210 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 21. அன்னாய் வாழிப் பத்து, அன்னாய், வாழிவேண், இலக்கியங்கள், டன்னை, ஐங்குறுநூறு, வாழிப், பத்து, குன்றே, மணிநெடுங், சங்க, எட்டுத்தொகை, உவக்காண்