விநாயகர் அகவல் - அவ்வையார் நூல்கள்
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும் எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப் புரியட்ட காயம் புலப்பட் எனக்குத் தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி . |
52 |
கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி என்னை அறிவித்து எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து . |
56 |
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெலிவித்து இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்(து)- அழுத்திஎன் செவியில். |
60 |
உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி, மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன் மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபால வாயிலை எனக்கு காட்டித் தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்க அருளி, நான் யார் என்பதை எனக்கு அறிவித்து, பூர்வ ஜென்ம கன்ம வினையை அகற்றி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கு தந்து அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி, இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றே அடிப்படையானது என்பதை உணர்த்தி, அருள் நிறைந்த ஆனந்தத்தை உன் காதுகளில் அழுத்தமாக கூறி
தேடல் தொடர்பான தகவல்கள்:
விநாயகர் அகவல் - அவ்வையார் நூல்கள், எனக்கு, நூல்கள், விநாயகர், அருளி, அகவல், அவ்வையார், | , மூலம், தந்து, எட்டு, என்பதை, மனமும், தூலமும், கபால, அறிவித்து, இலக்கியங்கள்