விநாயகர் அகவல் - அவ்வையார் நூல்கள்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பக் களிரே! முப்பழம் நுகரும் மூஸிக வாகன இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் . |
16 |
தாயாய் எனக்குத் தானெழந்(து) அருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து . |
20 |
குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே. |
24 |
சொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும் நிலையில் உண்மையான ஞானமானவனே, மா,பலா,வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே, மூஞ்சூறினை வாகனமாக கொண்டவரே, இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி, தாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே, மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்து எறிபவரே, திருத்தமானதும் முதன்மையானதும் ஐந்து எழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சர மந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க என்னுடைய உள்ளத்தில் புகுந்து, குரு வடிவெடுத்து மிக மேன்மையான தீட்சை முறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையான நிலையான பொருள் எது என்று உணர்த்தி, துன்பமில்லாமல் என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்கு அருள் செய்து, கோடாயுதத்தால் என்னுடைய பாவ வினைகளை அகற்றி..
தேடல் தொடர்பான தகவல்கள்:
விநாயகர் அகவல் - அவ்வையார் நூல்கள், நூல்கள், விநாயகர், அவ்வையார், அகவல், என்னுடைய, அருள், | , எனக்கு, தீட்சை, புகுந்து, இலக்கியங்கள், என்னை, திருவடி, உண்மையான