கடல் ஆடு காதை - சிலப்பதிகாரம்
3.புகார் நோக்கி வருதல்
(விஞ்சை வீரன் தன் காதலியுடன் புகார் நோக்கி வந்தான்)
சிமையத் திமையமுஞ் செழுநீர்க் கங்கையும் உஞ்சையம் பதியும் விஞ்சத் தடவியும் வேங்கட மலையும் தாங்கா விளையுட் |
30 |
காவிரி நாடுங் காட்டிப் பின்னர்ப் பூவிரி படப்பைப் புகார்மருங் கெய்திச் சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி மல்லன் மூதூர் மகிழ்விழாக் காண்போன் |
கொடிமுடியையுடைய இமய மலையுயையும்;வளமான நீரினையுடைய கங்கையையும்;அழகிய உச்சயினி நகரையும்;விந்திய மலை சூழ்ந்த காட்டையும்;வெங்கடமலையையும்;நிலம் கொள்ளாத அளவு பெரும் விளைச்சல் மிகுந்த காவிரி பாயும் சோழநாட்டையும்,புகார் வரும் வழியிலே,தன் காதலிக்குக் காட்டினான் விஞ்சை வீரன்.பின்னர் பூக்கள் இதழ் குவிந்து மலர்ந்து விளங்கும் தோட்டங்களை உடைய புகார் நகரம் வந்து சேர்ந்தான்.தான் முன்னே சொல்லியபடி,நாளங்காடிப் பூதம்,ஐவகை மன்றம்,இந்திரன் கோயில் ஆகியவற்றையும் தன் காதலிக்கு காட்டினான்.இருவரும் அத்தெய்வங்களைத் தொழுதனர்.தொழுதபின்,வளம்பொருந்திய பழைய நகரமான புகார்நகரத்திலே நடைபெறும் இந்திர விழாவினையும் தன் காதலியுடன் கண்டு களித்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல் ஆடு காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]