பாடல் 24 - ரிஷபம், மிதுன இலக்கின ஜாதகர் - புலிப்பாணி ஜோதிடம் 300
சொல்லப்பா எருதோடு மிதுனத்தோர்க்கு |
அன்பனே! நான் கூறுவதை மிகவும் கவனமாகக் கேட்பாயாக! ரிஷபம், மிதுனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் மிகவும் என்றும் உண்டு எனக் கூறுவார். ஆயினும் அந்தணர் எனப்படும் குருபகவான் கேந்திரத்தில் [1,4,7,10 ஆகிய இடங்களில்] நின்றால் அவரால் ஏற்படும் கொடுமை மிகவும் அதிகம். எவ்வாறெனில், பூமி, பொருள், தனம் நாசமடையும். அது மட்டுமல்லாமல் அன்றலர்ந்த மலர்மாலை அணியும் அரசர்களின் துவேஷமும் ஏற்படும். நோய் முதலிய துன்பம்,உண்டென்று கூறுவாய் எனினும் குருபகவானும் சந்திரனும் 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானத்தில் இருப்பார் என்றால் ஜாதகனுக்கு நன்மை பெருகிப் பல்கும் எனவும் கூறுவாயாக. [எ-று]
இப்பாடலில் ரிஷபம், மிதுன இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 24 - ரிஷபம், மிதுன இலக்கின ஜாதகர் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், ரிஷபம், புலிப்பாணி, மிதுன, மிகவும், இலக்கின, ஆகிய, ஜாதகர், பாடல், ஏற்படும், astrology, உண்டென்று