பாடல் 228 - இராகு மகாதிசை, கேது புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரேநீ ராகுதிசை கேதுபுத்தி |
இனி, இராகு திசையில் கேதுபகவானின் புத்தி ஒரு வருடம் பதினெட்டு நாள்களாகும். இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவன: எவ்விடத்திலும் விரோதம் ஏற்படுதலும் அதனால் பகைவர்கள் பெருகிக் காணலும் நேரும். உடல்நலத்தைப் பொறுத்தவரை கேட்டினையே செய்தலும் ஏவல், பில்லி முதலியவற்றால் திரண்ட திரவியங்கள் சேதமாதலும் தேகத்தில் தீராப்பிணிக்குரிய அடையாளங்களும் காணும் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் இராகு மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 228 - இராகு மகாதிசை, கேது புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, இராகு, கேது, பாடல், பலன்கள், புத்திப், மகாதிசை, காணும், astrology, தேகத்தில்