பாடல் 119 - புலிப்பாணி ஜோதிடம் 300
ஆரப்பா யின்னமொரு சேதிகேளு |
இன்னுமொரு கருத்தினையும் உனக்குக் கூறுகிறேன். அதனையும் நன்கு கவனிப்பாயாக! இலக்கினத்திற்கு 6க்குடையவன் கேந்திரஸ்தானத்தில் (1,4,7,10) இருந்தால் அச்சென்மனுக்கு அரசதோஷம் மற்றும் திருடர் பயம், சோரம் போவதால் துன்பம் விளைதல், குடும்பத்தில் களவு போதல், வீட்டில் சண்டையும், குமரிப்பெண் கூச்சலிட்டு வெளிவருதலும், விஷபயமும், வெடி முதலியவற்றால் துன்பமும் இன்னும் இது போன்ற பல துன்பங்களும் ஏற்படும் என்று போகரது ஆணையால் புலிப்பாணி புகன்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 119 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், குடும்பத்தில், astrology