ஜோதிடப் பாடம் – 5 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
மிருகசீரிஷத்தின் ஆத்தியந்த பரமநாழிகை =57.34
அதாவது மிருகசீரிஷத்தின் 4- பாதங்களுக்கு =57.34
ஒரு பாதத்திற்கு =57.34 / 4 =14.24 நாழிகை
சந்திரன் 14.24நாழிகை வரையில் முதல் பாதத்தில் இருக்கிறார். நம்முடைய மானசீகக் குழந்தைக்கு மிருகசீரிஷத்தில் 4 நாழிகை 12 வினாழிகை சென்று இருக்கிறது. ஆகவே சந்திரன் முதல் பாதத்தில் தான் இருக்கிறார். ஆக சந்திரனை ரிஷபத்தில் போடுங்கள். என்ன 9 கிரகங்களையும் போட்டு விட்டீர்களா? இப்போது திருகணித ரீதியாக ஜாதகத் தைப் போட்டோம். வாக்கியப் பஞ்சாங்கத்தை வைத்துப் போடுவோமா?
நாம் கையாண்ட திருகணிதப் பஞ்சாங்கம் காஞ்சீபுரத்தை வைத்துக் கணிக்கப் படுகிறது. வாக்கியப் பஞ்சாங்கம் தஞ்சாவூரை வைத்துக் கணிக்கப்படுகிறது. அதில் சூரியோதயம் காலை 6.06 எனப் போட்டு இருக்கிறார்கள். அதாவது தஞ்சாவூரில் சூரியோதயம் காலை 6.06. நாம் எடுத்துக் கொண்ட மானசீகக் குழந்தை சென்னையில் பிறந்தது எனக்கொள்வோம். திருகணிதத்தில் காஞ்சீபுரத்தில் சூரியோதயம் காலை 06.02 எனப் போட்டுள்ளதால் நாம் அந்த சூரியோதயத்தையே எடுத்துக் கொள்வோம். வாக்கி யப் பஞ்சாங்கத்தில் காலை 12நாழிகை 40 வினாழிகை வரை தான் மிருகசீரிஷம் எனப் போட்டு இருக்கிறார்கள். அதற்குப்பின் திருவாதிரை நட்சத்திரம் தான் வருகிறது. திருவாதரையில் எந்தப் பாதம் வருகிறது எனப் பாருங்கள். திருவாதரையின் ஆத்தியந்த பரம நாழிகையைக் கண்டு பிடியுங்கள். பின்பு குழந்தை எந்தப் பாதத்தில் பிறந்து இருக்கிறது எனக் கண்டு பிடியுங்கள். திருவாதரை 2-ம் பாதத்தில் பிறந்து இருக்கிறது. சந்திரனை மிதுனத்தில் போடுங்கள். இரண்டு பஞ்சாங்கத்திலும் ஜாதகம் கணித்தபின் எப்படி இருக்கிறது எனப்பாருங்கள்.
வித்தியாசம் தெரிகிறது அல்லவா? நட்சத்திரமே மாறி இருக்கிறது அல்லவா? அதற்குத்தான் நாம் திருகணிதத்தையே எல்லோரும் கையாள வேண்டும் எனக் கூறி வருகிறோம். கிரகங்கள் பார்க்கின்றன என ஜோதிடத்தில் கூறுகிறார்கள் அல்லவா? பார்வை என்றால் என்ன? அதை இப்போது பார்ப்போம். எல்லாக் கிரகங்களும் தான் இருக்கும் வீட்டில் இருந்து 7-ம் வீட்டைப் பார்க்கும். உதாரணமாக சந்திரன் ரிஷபத்தில் இருக்கிறார். அவர் 7-ம் பார்வையாக விருச்சிகத்தைப் பார்ப்பார். ரிஷபத்திலிருந்து எண்ணுங்கள். ரிஷபம் 1, மிதுனம் 2, கடகம் 3, சிம்மம் 4, கன்னி 5, துலாம் 6, விருச்சிகம் 7. ஒருகிரகம் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டையும் சேர்த்து எண்ண வேண்டும். சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், ராகு, கேது ஆகிய கிரகங்கள் தான் இருக்கும் வீட்டி லிருந்து 7-ம் வீட்டைப் பார்ப்பார்கள்.ஆனால் குரு, சனி, செவ்வாய் ஆகியகிரகங்களுக்கு 7-ம் பார்வையைத் தவிர வேறு சில பார்வைகளும் உண்டு. செவ்வாய்:- அவர் தான் இருக்க்கும் இடத்திலிருந்து 4, 7, 8-ம் வீடுகளைப் பார்ப்பார். நம் ஜாதகத்தில் விருச்சிகத்தில் இருக்கிறார். அவர் 4-ம் பார்வையாக கும்பத்தையும், 7-ம் பார்வையாக ரிஷபத்தையும், 8-ம் பார்வையாக மிதுனத்தையும் பார்ப்பார். அவர் ரிஷபத் தைப்பார்க்கும் போது அதில் உள்ள சந்திரன், சனி ஆகிய கிரகங்களையும் பார்ப்பார். அதே போல் மிதுனத்தைப் பார்க்கும் போது அதில் உள்ள குரு, ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களையும் பார்ப்பார். பார்வையினால் என்ன பலன் என்பதைப் பின்னால் பார்ப்போம்.
குரு:- அவர் தான் இருக்கும் வீட்டிலிருந்து 5-ம் வீடு, 7-ம் வீடு, 9-ம் வீடு ஆகியவற்றைப் பார்ப்பார். குரு மேற்கண்ட ஜாதகத்தில் மிதுனத்தில் இருக்கிறார். அவர் 5-ம் பார்வை யாக துலாத்தையும், 7-ம் பார்வையாக தனுசையும், 9-ம் பார்வையக கும்பத்தையும் பார்ப்பார். அந்த வீடுகளையல்லாது அந்த வீட்டில் உள்ள கிரகங்களையும் பார்ப்பார்.
சனி:- அவர் தான் இருக்கும் வீட்டிலிருந்து 3-ம் வீடான கடகத்தையும், 7-ம் வீடான விருச்சிகத்தையும் 10-ம் வீடான கும்பத்தையும் பார்ப்பார். அந்த வீட்டிலுள்ள கிரகங்களையும் பார்க்கிறார். மற்ற கிரகங்களுக்கெல்லாம் 7-ம் பார்வை ஒன்று தான். பார்வை என்பது இரண்டு கிரகங்களுக்கோ அல்லது ஒரு கிரகத்துக்கும், ஒரு வீட்டிற்கும் உள்ள தூரம் தான். இந்த தூரத்தைத்தான் நாம் பார்வை என்கிறோம்.
ஜாதகத்தில் நாம் ஒன்பது கிரகங்களைப் போட்டு விட்ட்டோம். இனி இலக்கினமும், ஜனனகால இருப்பு தெசையையும் கணித்தோமேயானால் ஜாதகம் முழுமை ஆகிவிடும். இப்போது இலக்கினம் என்றால் என்ன எனப் பார்ப்போம்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 5 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, தான், பார்ப்பார், அவர், நாம், எனப், இருக்கிறது, பார்வையாக, பார்வை, அந்த, ஜோதிடப், இருக்கிறார், கிரகங்களையும், சந்திரன், குரு, என்ன, போட்டு, உள்ள, பாதத்தில், இருக்கும், காலை, ஆகலாம், ஜோதிடம், வீடான, நீங்களும், பாடம், பார்ப்போம், வீட்டில், சூரியோதயம், ஜோதிடர், வீடு, ஆகிய, அதில், ஜாதகத்தில், அல்லவா, இப்போது, கும்பத்தையும், வேண்டும், என்றால், கிரகங்கள், போது, பார்க்கும், சுக்கிரன், வீட்டிலிருந்து, ராகு, வீட்டைப், செவ்வாய், குழந்தை, சந்திரனை, வினாழிகை, ரிஷபத்தில், போடுங்கள், வாக்கியப், மானசீகக், நாழிகை, பாடங்கள், மிருகசீரிஷத்தின், ஆத்தியந்த, அதாவது, பஞ்சாங்கம், வைத்துக், பிறந்து, எனக், மிதுனத்தில், இரண்டு, பிடியுங்கள், கண்டு, இருக்கிறார்கள், எடுத்துக், வருகிறது, எந்தப், ஜாதகம்