ஜோதிடப் பாடம் – 39 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
குளிகன் உதயமாகும் நாழிகை 39 நாழிகை 48 வினாழிகையாதலால் துலா ராசியில் விசாகம் 3-ம் பாதத்தில் உதயமாகிறார். அப்படியானால் துலாத்தில் ராசியிலும். நவாம்சத்தில் மிதுனத்திலும் குளிகனைப் போட வேண்டும். இப்போது குளிகனை எப்படிக் கணிதம் செய்ய வேண்டுமென்று தெரிந்து கொண்டீர்கள் அல்லவா!
To Sum up :
குளிகனைக் கணிக்க
1. பிறந்த கிழமை
2. குளிகன் உதயமாகும் நேரம்.
இவை தெரிந்தால் போதுமானது. மிக எளிதாகப் போட்டு விடலாம்.
சரி! மாந்தியைப் போட்டு விட்டோம். அதற்குப் பலன் எப்படிச் சொல்வது? அதையும் கீழே கொடுத்துள்ளோம்.
பொதுவாக மாந்தியானவர் அசுபப் பலன்களைத்தான் கொடுக்கின்றார். 10, 11-ம் வீடுகளைத் தவிர வேறு எந்த வீட்டில் இருந்தாலும் அவர் அசுப பலனைத்தான் கொடுக்கின்றார்.
முதல் வீடான இலக்கினம் : இங்கு மாந்தி இருந்தால் முகத்தில் வசீகரமும் அழகும் குறைவாக இருக்கும். எப்போதும் வாட்டத்துடன் காணப்படுவர். நற்குணங்கள் குறைவாக இருக்கும். சிலருக்கு உடலில் நோய் இருந்து கொண்டே இருக்கும்.
2-ம் வீடு : பணப் புழக்கம், ஆபரண யோகம், வாக்கு சுத்தம் ஆகியவை குறைவாக இருக்கும். கண் பார்வை கூட சிலருக்குக் குறையும். குடும்பத்தில் அமைதி குறையும். குடும்ப ஒற்றுமையும் குறையும்.
3-ம் வீடு : சகோதரத்தால் உபயோகமில்லை. தைரியம் குறைவாக இருக்கும். பொதுவாக 3-ம் பாவத்தைக் குறிக்கும் காரகத்துவங்கள் பாதிக்கப்படும்.
4-ம் வீடு : கல்வியில் தடை உண்டாகும். தாயால் அனுகூலங்கள் குறைவாக இருக்கும். வாகன யோகம் குறைவாக இருக்கும்.
5-ம் வீடு : இது புத்திர தோஷத்தை ஏற்படுத்தும்.முற்பிறவியில் செய்த தீவினைகளுக்கு இப்பிறவியில் பலன் அனுபவிக்க நேரிடும்.
6-ம் வீடு : உறவினர்களைப் பிரிய நேரிடும். கடன் வந்து சேரும். தாய் மாமன் உறவு உதட்டளவில்தான் இருக்கும்.
7-ம் வீடு : களத்திரஸ்தானத்தில் மாந்தி நிற்க களத்திர தோஷத்தைக் கொடுக்கும். 7-ம் வீடு வியாபாரத்தையும் குறிக்கிறது அல்லவா? வியாபாரம் மந்தமாகும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல கூட்டாளி அமைய மாட்டார்.
8-ம் வீடு : விபத்துக்கள் நடக்க வாய்ப்பு உண்டு. பிதுராஜித சொத்துக்களில் வியாஜ்யம் இருந்து வரும். பெண்களாக இருந்தால் மாங்கல்ய பாக்கியம் குறைவு.
9-ம் வீடு : தந்தையால் அனுகூலங்கள் குறைவு. தருமம் செய்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும்.
10-ம் வீடு : இங்கு மாந்தி சுப பலன்களைக் கொடுக்கிறார். தொழில் நல்ல விதமாக அமையும். வாழ்வில் நல்ல உயர் பதவிக்கு வர முடியும். நல்ல பெயரும் புகழும் கிடைக்கும்.
11-ம் வீடு : தன லாபம் உண்டு. மூத்த சகோதரர்கள் நல்ல விதமாக அமைவர். எடுத்த காரியங்களில் வெற்றியும், லாபமும் உண்டாகும்.
12-ம் வீடு : தன விரயங்கள் இருக்கும். நிம்மதியான உறக்கம் இருக்காது. அலைச்சல்கள் மிகுந்து நிம்மதியான வாழ்க்கை இருக்காது.
இவைகளெல்லாம் மாந்தியின் பொதுப் பலன்கள். பொதுவாக 10-ம் வீடு, 11-ம் வீடு தவிர மற்ற வீடுகளில் நல்ல பலன் தருவது இல்லை."மாந்தியின் கெடுபலன்களில் இருந்து விடுபட பரிகாரங்கள் செய்யலாமா?" என்றால் பரிகாரங்கள் எதுவும் நம் நூல்களில் சொல்லப்படவில்லை. நவகிரகங்களுக்குப் பரிகாரம் இருப்பதுபோல் மாந்திக்குக் கோவில் கிடையாது. கேரளாவில் மட்டும் கோவில் உண்டு.
மாந்திக்குப் பார்வை எதுவும் கிடையாது. தான் இருக்கும் வீட்டிற்குத்தான் பலன் கொடுப்பார். அதேபோல் கேந்திர ஸ்தானங்கள், திரிகோண ஸ்தானங்கள் ஆகிய வற்றில் இருந்தாலும் பலன்கள் மாறுவது இல்லை. கோட்ச்சார பலன்கள் எதுவும் மாந்திக்குக் கிடையாது. கோட்ச்சாரபலன் என்பது கிரகங்களின் தற்போதைய நிலை. மாந்திக்கு நட்சத்திரங்களோ, வீடுகளோ இல்லையாதலால் அது தசா, புக்திகளிலும் இடம்பெறவில்லை. ஆகவேதான் பொதுவாக மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 39 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, வீடு, இருக்கும், நல்ல, குறைவாக, ஜோதிடப், பலன், பொதுவாக, குறையும், மாந்தி, இருந்து, பாடம், பலன்கள், எதுவும், ஆகலாம், ஜோதிடம், ஜோதிடர், கிடையாது, நீங்களும், உண்டு, குறைவு, விதமாக, இருக்காது, நிம்மதியான, ", ஸ்தானங்கள், மாந்திக்கு, கோவில், மாந்திக்குக், இல்லை, பரிகாரங்கள், மாந்தியின், யோகம், அல்லவா, போட்டு, கொடுக்கின்றார், நாழிகை, உதயமாகும், பாடங்கள், குளிகன், தவிர, இருந்தாலும், அனுகூலங்கள், நேரிடும், உண்டாகும், பார்வை, இங்கு, இருந்தால், வியாபாரம்