ஜோதிடப் பாடம் – 35 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
11-ம் வீடு நண்பர்களைக் குறிக்கிறது. நண்பர்கள் நல்லவர்கள்தானா, அவர்களை நம்பலாமா என்பதையும் 11-ம் வீட்டை வைத்துக் கூற வேண்டும். ஒருவர் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார் எனக் கொள்ளுங்கள். திருமணம் என்பது ஒரு சட்டபூர்வமான உறவு. அதைக் குறிப்பது 7-ம் வீடு; மனைவியிடம் வைத்திருக்கும் உறவு என்பதை 7-ம் வீடும் 11-ம் வீடும் குறிக்கின்றன. அவ்வாறு இல்லாமல் மனைவி என்ற உறவு இல்லாமல், ஒரு பெண்ணிடம் வைத்திருக்கும் உறவைக் குறிக்கும் வீடு 11-ம் வீடுதான்.
11-ம் வீடு மூத்த சகோதரத்தைக் குறிக்கிறது. 11-ம் வீட்டில் நல்ல கிரகங்கள் இருப்பார்களேயானல் மூத்த சகோதரம் நல்ல விதமாக அமையும். உதவி செய்யும் மனப்பான்மையுடனான மூத்த சகோதரம் அமையும். சனி, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருந்தால் மூத்த சகோதரத்தால் பயன் ஒன்றும் இல்லை.
ஒரு பெண்ணிணுக்குக் குழந்தை இல்லையெனக் கொள்ளுங்கள். அந்த ஜாதகத்தில்
5-ம் வீடென்பது அந்தப் பெண்ணின் புத்திரபாவத்தைக் குறிக்கிறது. 11-ம் வீடென்பது
அவள் கணவனின் புத்திர பாவத்தைக் குறிக்கிறது. எப்படி? 7-ம் வீடு கணவனைக்
குறிக்கிறது அல்லவா? அவனுடைய புத்திர ஸ்தானம் 7-க்கு 5-ம் வீடல்லவா? அது 11-ம் வீடல்லவா? 5-ம் வீடு பாதிக்கப்பட்டு இருந்தால் அந்தப் பெண் குழந்தை பெற முடியாதவளென்றும், 11-ம் வீடு பாதிக்கப் பட்டு இருந்தால் அவள் கணவன் குழந்தையைப் பெற முடியாதவனென்றும் கூற வேண்டும். எப்படி பாதிக்கப்பட்டு இருக்க வேண்டுமென்பதை பின்பு விளக்குகின்றோம். சில நாட்களுக்கு முன்புநமக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு பெண் பேசினார். தான் தன்கணவனுடன் Divorce-க்கு apply செய்திருப்பதாகவும், தனியாக வாழ்வதாகவும் கூறினார். தனக்குக் குழந்தை பிறக்க வேண்டுமென்றும் அதற்கு வழி இருக்கிறதா? எனக்கேட்டார். கணவனுடன் வாழாத பெண்ணிற்கு எப்படிக் குழந்தை பிறக்க முடியும்? எனப் திருப்பிக் கேட்டோம். அவர் தனக்கு மறுமணம் நடக்குமா? எனக் கேட்டார். நாம் மறுநாள் பதில் சொல்வதாகக் கூறிவிட்டு தொலைபேசியைக் கீழே வைத்து விட்டோம். இந்தப் பெண் ஜாதகம் எதுவும் கொடுக்க வில்லை. கணவனின் ஜாதகமும் கிடையாது. நாம் உடனே ஆரூடம் மூலமாக ஜாதகம் கணித்தோம். (ஆரூடம் என்பது நாம் பலன் சொல்ல நினைக்கும் நேரத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து ஜாதகம் கணிப்பது.) ஆராய்ந்து பார்த்ததில் மறுமணம் இல்லை என்ற பதில்கிடைத்தது. கணவனுக்கும் புத்திர பாக்கியம் இல்லை என பதில் கிடைத்தது. அதாவது ஆரூட ஜாதகத்தில் 11-ம் இடத்தைப் பார்த்தபோது புத்திரம் இல்லை எனத் தெரிந்தது. ஆனால் அந்தப் பென்ணின் 5-ம் பாவம் நன்றாக புத்திரபாக்கியத்துடன் இருந்தது. ஆக அந்தப் பெண்ணிற்கு புத்திரம் கிடைக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 35 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, வீடு, குறிக்கிறது, ஜோதிடப், இல்லை, குழந்தை, மூத்த, அந்தப், பெண், இருந்தால், புத்திர, நாம், உறவு, ஜோதிடம், ஜோதிடர், ஆகலாம், நீங்களும், பாடம், ஜாதகம், புத்திரம், க்கு, எப்படி, பாதிக்கப்பட்டு, மறுமணம், கணவனின், வைத்து, பெண்ணிற்கு, பிறக்க, பதில், ஆரூடம், வீடல்லவா, அமையும், கொள்ளுங்கள், என்பது, எனக், வேண்டும், பாடங்கள், வைத்துக், வைத்திருக்கும், வீடும், ஜாதகத்தில், வீடென்பது, சகோதரம், கிரகங்கள், இல்லாமல், நல்ல, அவள்