ஜோதிடப் பாடம் – 14 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
நாம் பொதுவாக ஆயுள் தீர்க்காயுளா அல்லது அற்ப ஆயுளா என்பதைப் பற்றி மேலே கூறியிருந்தோம். சரி! ஒருவருக்கு எப்போது மரணம் ஏற்படும்? யார் மரணத்தைக் கொடுப்பார்கள். மரணத்தைக் கொடுக்கும் கிரகத்திற்கு மாரகன் எனப் பெயர். பொதுவாக எந்த வீட்டிற்கும் 12-ம் வீட்டதிபர் அந்த வீட்டிற்கு நன்மையைச் செய்யாது. நான்காம் வீடு தாயாரைக் குறிக்கிறது. நான்காம் வீட்டிற்குப் 12-ம் வீடு 3வது வீடு அல்லவா! 3-ம் வீட்டிலுள்ள கிரகங்களும், 3-ம் வீட்டின் அதிபதியும் தாயாருக்கு நன்மையைச் செய்யாது. கெடுதல்தான் செய்யும். 7-ம் வீடு திருமணத் தைக் குறிக்கிறது. 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 6-ம் வீடு. 6-ம் வீட்டின் அதிபதியும் அதில் உள்ள கிரகங்களும் கணவன், மனவியரிடையே கருத்து வேற்றுமையும் , சில சமயம் விவாஹரத்தையும் கொடுத்துவிடும். எந்த வீட்டிற்கும் அதற்கு முந்தைய வீடு எதிர்மறையான பலன்களைக் கொடுக்கும்.
ஆயுளைக் குறிப்பது 1, 3, 8-வது வீடுகள் அல்லவா! இவற்றிற்கு முந்தையவீடு அல்லது 12-வது 12, 2, 7 வது வீடுகள் ஆகும். இவைகள் ஒருவரைக் கொல்லும் வல்லமை படைத்தவை. ஆகவே இவர்களை மாரகர்கள் என்றழைக்கலாம். 7-வது வீடு திருமணத்தைக் கொடுக்கும் என்று முன்பு கூறியிருந்தோம். இப்போது அதே 7-ம் வீடு மாரகத்தைக் கொடுக்கும் என்று எழுதுகின்றோம். கல்யாணவயதின் போது திருமணத்தைக் கொடுத்த 7-ம் வீட்டின் அதிபர் ஒருவருக்கு ஆயுளை முடிக்கும்போது அவர் மரணத்தையும் கொடுப்பார். ஒருவரின் ஜாதகத்தில் 2, 7, 12 க்கதிபர்கள், அதில் உள்ள கிரகங்கள் மாரகத்தைக் கொடுப்பார்கள் என்றும் எழுதி இருந்தோம். இவர்களைத்தவிர வேறு யாராவது மாரகத்தைக் கொடுப்பார்களா? இருக்கிறார்கள். அவர்களைக் கீழே பார்ப்போம்.
ராசிகளில் மேஷம், கடகம், துலாம் , மகரம்- ஆகியவை சரராசிகள் எனப்படும். இந்த சரரசிகளுக்கு 11-ம் வீடு பாதகத்தைக் கொடுக்கும். 11-ம் வீட்டு அதிபதியும், அதில் உள்ள கிரகங்களும் மரணத்தைக் கொடுக்கும். மேஷத்திற்குப் 11-ம் வீடு கும்பம்: அதன் அதிபதி சனி; ஆகவே மேஷத்திற்கு சனி பாதகாதிபதியாகிறார். இதேபோன்று கடகத்திற்கு சுக்கிரன், துலாத்திற்கு சூரியன், மகரத்திற்கு செவ்வாய் ஆகியோர் பாதகாதிபதியாகிறார்கள். பாதகாதிபதி என்றால் ஆயுள் முடியும் போது மட்டும் மரணத்தைக் கொடுப்பார்கள். மற்ற காலங்களில் அவர்கள் வேறெந்தக் கெடுதலையும் செய்ய மாட்டார்கள். உதாரணத்திற்குத் துலா ராசியை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் அதிபதி சூரியன். இவர் 10 வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 10-ம் வீடு ஜீவனஸ்தானம் அல்லவா! லாபாதிபதியான சூரியன் 10-ம் வீட்டில் இருந்தால் நல்ல வேலை கிட்டும். சிலருக்கு அரசங்க உத்தி யோகம் கிட்டும். சூரியன் அரசாங்கத்திற்குக் காரகம் வகிப்பவர். உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் எல்லாம் பெற்று நல்ல விதமாக வாழ்க்கை நடத்துவர். சூரியன் லாபாதிபதியாகி ஜீவனத்தில் அனர்ந்து அனைத்து நன்மைகளையும் செய்வார். சரி! அவருக்கு ஆயுள் 65 முடிய எனக்கொள்ளுங்கள். அப்போது சூரியதசையோ, அல்லது சூரியபுக்தியோ வருமாகில் அவர் அப்போது மாரகத்தைக் கொடுப்பார். அப்போது அவர் லாபாதிபதியாகச் செயல் படமாட்டார். பாதகாதிபதியாகச் செயல் படுவார். உத்தியோகத்தில் அவ்வளவு நன்மைகளைச் செய்த சூரியன் மாரகம் என்று வரும் போது மரணத்தைக் கொடுக்கவும் தயங்குவதில்லை. தன் கடமையைத் தவறாமல் செய்வார்.
ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியோருக்கு 9-ம் வீட்டிற் கதிபதிகளான முறையே சனி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன் ஆகியோர் பாதகாதிபதி ஆகின்றனர்.இவர்கள் ஆயுள் முடியும் போது தங்கள் தசா, புக்திக் காலங்களில் மரணத்தைக் கொடுப்பார்கள். ரிஷபத்திற்கு சனியோககாரகன் எனப் பெயர். அவர் தன் தசாபுக்தி காலங்களில் நன்மையைத்தான் செய்வார். இருப்பினும் ஆயுள்முடியும் போது அவர் தன் கடமையைச் செய்யாமலிருப்பதில்லை. அவர் மரணத்தைக் கொடுப்பார். ஆயுள் இருக்கும்போது நல்லவைகளையும், ஆயுள் முடியம்போது மாரகத்தையும் கொடுப்பார்.
உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றிற்கு 7-ம் வீட்டின் அதிபதி பாதகாதிபதியாகிறார். மிதுனத்திற்கு 7-ம் வீட்டின் அதிபதி குரு, கன்னிக்கு 7-ம் வீடான மீனத்திற்கதிபதி குரு பாதகாதிபதியாகிறார். தனுசுவிற்கும், மீனத்திற்கும் புதன் 7-ம் வீட்டிற்கதிபதியாகி அவர் பாதகாதிபதியாகிறார். இளமையில் திருமணத்தைக் கொடுத்த குருவும், புதனும் ஆயுள் முடியும்போது ஆயுளை முடித்துவைக்கவும் செய்வார்கள். இப்போது மாரகாதிபதிபதிகள், பாதகாதிபதிகள் யார் யார் எனத் தெரிந்து கொண்டீர்கள். கீழே சில உதாரணஜாதகத்தைக் கொடுத்து இருக்கிறோம். அவர்களுக்கு எப்போது மாரகம் சம்பவித்தது எனக் கொடுத்துள்ளோம்.
ஜாதகம் No.1 ஐப் பாருங்கள். இவர் 53 ஆண்டுகள்தான் வாழ்ந்து இருந்தார். சனிதசை, ராகு புக்தியில் காலமானார். சனி இவருக்கு யோககாரகன். அப்படி இருந்தும் இவர் அவர் தசையில் ராகு புக்தியில் காலமானார். சனி மாரகஸ்தானமான 7-ம் வீட்டில் இருக்கிறார். புக்தினாதனான ராகு சனியால் பார்க்கப்படுகிறார். ஆக சனிதசை, ராகுபுக்தியில் இவருக்கு மாரகம் சம்பவித்தது.
அடுத்த ஜாதகம் No. 2-ஐப் பாருங்கள். இவர் வாழ்ந்தது 31 ஆண்டுகள்தான். குருதசை, செவ்வாய் புக்தியில் காலமானார். குரு எப்படி மரணத்தைக் கொடுத்தார்? இந்த இலக்கினத்திற்கு 11-க்குடையவன் சுக்கிரன் மாரகாதிபதி அல்லவா? அவருடைய நட்சத்திரமான பரணியில், குரு இந்த ஜாதகத்தில் அமர்ந்து இருக்கிறார். ஆக மாரகாதிபதி சுக்கிரன் கொடுக்கக்கூடிய மரணத்தை குரு கொடுத்துவிட்டார். அதுசரி! புக்திநாதன் செவ்வாய் எப்படி மரணத்தைக் கொடுத்தார்? செவ்வாயானவர் ஸ்வாதி நட்சத்திரத்தில் இருக்கிறார். ராகு 8-ல் இருந்தாலும் அவர் சனியின் வீட்டில் இருப்பதால் சனி கொடுக்கக்கூடிய பலன்களைஅவர் கொடுப்பார். ஏனெனில் அவருக்கு சொந்த வீடு எதுவும் கிடையாது. அவர் எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டுப்பலனைக் கொடுப்பார் அல்லவா? சனி 7, 8 வீடுகளுக்கு அதிபதி. ஆக ராகுவானவர் 7-ம் வீட்டுப் பலனையும் கொடுக்கின்றார். 7-ம் வீடு மாரகஸ்தானம் அல்லவா? ஆக சனி கொடுக்க வேண்டிய மாரகத்தை ராகு கொடுக்கின்றார். அவருடைய நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்ததால் செவ்வாய் இந்த ஜாதகருக்கு மாரகத்தைக் கொடுத்து விட்டார். இந்த உதாரணத்திலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது ஒரு கிரகம் எந்த நட்சத்திரச் சாரத்தில் அமர்ந்து இருக்கிறது என்பதையும் பார்த்துத்தான் பலன் சொல்ல வேண்டும். நட்சத்திரச்சாரம் மிகவும் முக்கியம். பலன் சொல்லும்போது ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தின் காலில் அல்லது சாரத்தில் அமர்ந்துள்ளது எனப் பார்த்துப் பலன் சொல்ல வேண்டும். இப்போது ஒரளவிற்கு ஆயுள் பாவத்தைப் பற்றித் தெரிந்து கொண்டுள்ளீர்கள். பல ஜாதகங்களைவைத்துக் கொண்டு அவர்கள் எப்போது காலமானார்கள் எனப் பார்த்து பலன் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 14 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, வீடு, அவர், மரணத்தைக், ஆயுள், அல்லவா, செவ்வாய், கொடுப்பார், சூரியன், கொடுக்கும், குரு, ராகு, வீட்டின், போது, ஜோதிடப், எந்த, வீட்டில், மாரகத்தைக், அதிபதி, கொடுப்பார்கள், அல்லது, இவர், இருக்கிறார், சுக்கிரன், எனப், பலன், பாதகாதிபதியாகிறார், ஜோதிடர், காலங்களில், ஆகலாம், ஜோதிடம், மாரகம், புக்தியில், காலமானார், பாடம், தெரிந்து, அப்போது, நீங்களும், செய்வார், கொள்ளுங்கள், உள்ள, திருமணத்தைக், அதில், அதிபதியும், கிரகங்களும், எப்போது, இப்போது, யார், நன்மையைச், செய்யாது, அந்த, இவருக்கு, எப்படி, சனிதசை, ஆண்டுகள்தான், கொடுத்து, சம்பவித்தது, ஜாதகம், பாருங்கள், கொடுத்தார், மாரகாதிபதி, சாரத்தில், வீட்டிற்கும், சொல்ல, வேண்டும், கிரகம், கொடுக்கின்றார், அவருடைய, அமர்ந்து, கொடுக்கக்கூடிய, நட்சத்திரத்தில், நான்காம், குறிக்கிறது, முடியும், ஜாதகத்தில், பெயர், பொதுவாக, பாதகாதிபதி, ஆகியோர், கீழே, ஆகவே, பாடங்கள், வீடுகள், ஒருவருக்கு, ஆயுளை, கூறியிருந்தோம், செயல், வீட்டிற்குப், ராசிகளான, அவருக்கு, கொடுத்த, எனக், நல்ல, கிட்டும், உத்தியோகத்தில், கும்பம்