ராம நாடகம் - நாடகக் கலைக் கட்டுரைகள்
சீதையைக் குகனுக்கு அறிமுகப்படுத்தும் போது ராமன், 'இவள் உன்கொழுந்தி' என்று சொல்லாமல் "உன் மதனி கண்டாய்" என்று கூறுவதாகப் பாடியிருக்கிறார். சூர்ப்பனகை ராமனைப்பார்த்து, "நீ என் கணவன் ஆனால்" என்பதற்குப் பதிலாக "நீ என் வீட்டுக்காரன் ஆனால்" என்கிறாள். இப்படிப் பற்பல சொற்களையும் பேச்சுத்தமிழில் இருந்தே எடுத்து வழங்கியிருக்கிறார். முறைப்படி பாடம் கேட்டு, தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய பெரும் புலமை எய்திய கவிராயர், இப்படியெல்லாம் பொது ஜனத் தமிழைக் கையாண்டிருப்பதால், அது வேண்டுமென்றே செய்த காரியம் என்பது தெளிவு.
சம்பவங்களை விவரிக்கும் கட்டங்களில் - முக்கியமாகச் சண்டைக் காட்சிகளில்-இந்தத் தமிழ், நமக்கு ஒவ்வொரு காட்சியையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது. பண்டிதத் தமிழைக் கையாண்டிருந்தால் நாம் ஒருவேளை வேறு சுவையை அனுபவித்திருக்கக்கூடும். ஆனால் இந்த அலாதியான சுவையை அந்தப் பண்டித அனுபவித்திருக்கவே முடியாது என்பது நிச்சயம்.
நாடகப் பாத்திரங்கள்
ராமன், சீதை, அனுமான், ராவணன் போன்ற பாத்திரங்கள் இவ்வாறு இன்றைய பாமர மக்களின் பாஷையில் பேசிக்கொண்டால், நாடகப் பாத்திரங்களின் குணச் சித்திரங்கள் பாழாகிவிடாதா, ராமனைப் போன்ற ஒரு தன்னரில்லத் தலைவன் எழுத்து வாசனையற்ற இன்றைய பாமரனைப் போல் பேசினால் அது அந்த உன்னதமான பாத்திரத்திற்குப் பொருந்துமா என்றெல்லாம் கேட்கத் தோன்றும். சாதாரணமாக, பாத்திரங்கள் தங்கள் தகுதியினின்றும் இறங்கி வந்து அடிமட்டத்தில் இருப்பவர்களைப் போல் பேசினால் பாத்திரப் படைப்பு பாழாகிவிடும் என்பது உண்மையே. ஆனால், அருணாசலக் கவிராயர் பாமர பாஷையைப் பேச வைத்தே ராமனைத் தன்னேரில்லாத் தலைவனாகப் படைத்திருக்கிறார்! ராவணன் என்ற பாத்திரமும் அதன் நிலையினின்றும் இறங்கிவிடவில்லை. கவிராயருக்கு இருந்த இணையற்ற திறமை இந்தச் செயற்கரிய காரியத்தை எப்படியோ சாதித்துவிட்டது. ராமன் பழைய காவிய ராமனாகவும் ராவணன் கம்பர் படைத்த ராவணனாகவும் இருக்கும் அதே சமயத்தில் நமக்குப் பக்கத்து வீட்டிலோ, அடுத்த ஊரிலோ இன்றும் நாளையும் வசிப்பவர்களைப் போல், நாம் அடிக்கடி பார்த்தவர்களைப் போல், அவர்கள் காட்சியளிக்கும் படியாகவும் அவர் செய்திருக்கிறார். இதனால் நாடகப் பாத்திரங்கள் நம்மிடையே வாழும் மனிதர்களாகவே இருக்கிறார்கள்.
எங்கோ ஆகாயத்திலிருந்து குதித்தவர்களைப் போல், கற்பனா லோகத்தை மட்டுமே சேர்ந்த செயற்கைப் பாத்திரத்திரங்களைப் போல் அவர்கள் காணப்படவில்லை.
ஆகவே, கவிராயர் பொதுமக்களின் பேச்சுத் தமிழைப் பயன்படுத்தி நாடகத்தை இயற்றியதனால், கம்பராமாயணம் என்ற ஈடு இணையற்ற ஒரு பேரிலக்கியம் இருந்தாலும், தமது நாடக நூலுக்கும் ஒரு தேவை இருக்கிறது என்று காட்டிவிட்டார். நாடகம் என்றால் உண்மைச் சம்பவம் போலவும், நாம் ஒன்றி விடக்கூடிய தத்ரூபமான பாத்திரங்களோடு அமைய வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அவ்வளவையும் செய்து மகத்தான வெற்றி பெற்றுவிட்டார். அவரைப் பின்பற்றிப் பிற்காலத்தில் பல புலவர்கள் நாடகம் இயற்ற முயன்றிருப்பதைப் பார்க்கும் போது, அவர் காட்டிய வழி எவ்வளவு சிறந்த வழி என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
வாழ்க்கை
அருணாசலக் கவிராயர் மறைந்து 188 ஆண்டுகள் ஆகின்றன. அவர் தஞ்சாவுர் மாவட்டத்தில் தில்லையாடி என்ற ஊரில் கி.பி. 1712-ல் பிறந்தார்; அவருடைய தந்தை நல்லதம்பிப் பிள்ளை என்பவர் சைன மதத்தினராக இருந்து பிறகு சைவ சமயத்திற்கு வந்தவர். கவிராயர் தருமபுரம் மடத்தில் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்த்து, 30-வது வயதில் கருப்பூர் என்னும் ஊரில் ஒரு பென் மணியை மணந்து காசக் கடை வைத்து வியாபாரம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்தைச் சேர்ந்த ஒரு மடத்தின் கட்டளைத் தம்பிரானாக இருந்த சிதம்பரம் பிள்ளை என்பவரின் ஆதரவினால் குடும்பத்தோடு சீர்காழிக்கு வந்து இருபத்தைந்து ஆண்டுகள் அங்கே வாழ்ந்தார். 60-வது வயதில் ராம நாடகத்தை இயற்றி முடித்து ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார்.
சென்னைக்கு வந்த மணலி-முத்துக்கிருஷ்ண முதலியார் என்ற பிரபுவின் முன்னிலையில் ராம நாடகத்தைப் பாடிப் பரிசில் பெற்றார். அந்தக் காலத்தில் வாழ்ந்த தேப்பெருமாள் செட்டியார். தஞ்சை மன்னர் துளசி மகாராஜா, புதுச்சேரி ஆனந்தரங்கப் பிள்ளை உடையார் பாளையம் ஜமீன்தார்,சிற்றேறி அருணகிரி முதலியார், மண்ணாடி வேங்கடாசல செட்டியார் என்ற பிரமுகர்களின் பாராட்டும் ஆதரவும் பெற்று வாழ்ந்து கி.பி. 1779.க்குச் சரியான விகாரி ஆண்டு ஆனி மாதம் தமது 67-வது வயதில் காலமானார். சிற்றேறி அருணகிரி முதலியார்தான் முதல் முதலில் ராம நாடகத்தை அச்சேற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தம்மை ஆதரித்த வள்ளர்களைப் புகழ்ந்தும் கவிராயர் சில பாடல்கள் பாடியிருக்கிறார்.
இங்கே வேறொரு முக்கியமான விஷயத்தையும் கூற வேண்டியது அவசியம். அருணாசலக் கவிராயர் வாழ்ந்த காலம் தமிழ் நாட்டில் மூலைக்கு மூலை சண்டைகளும், முற்றுகைகளும் நடந்துகொண்டிருந்த காலம். பிரெஞ்சு, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிகளின் படைகளும், நவாப் படைகளும், பாளையப் பட்டுக்களின் படைகளும் அல்லும் பகலும் போராடிக் கொண்டு, மக்களின் வாழ்வில் அமைதியைக் குலைத்துக்கொண்டிருந்த காலத்தில், அருணாசலக் கவிராயர் ஓரிடத்தில் ஒதுங்கி இருந்து இவ்வளவு பெரிய நூலை இவ்வளவு சிறந்த முறையில் இயற்றி முடித்தார். இது ஒரு வகையில் ஆச்சரியப்பட்டத்தக்க தாகவும், ஒரு வகையில் சூழ்நிலையை லட்சியம் பண்ணாத அவருடைய கவித்துவ ஆவேசத்தை எடுத்துக் காட்டுவதாகவும், வேறொரு வகையில் எந்த நிலையிலும் விடாமுயற்சியுடன் ஒரு நல்ல காரியத்தைச் செய்து தீர வேண்டும் என்ற அவருடைய லட்சிய உறுதியை நமக்குப் புலப்படுத்துவதாகவும் இருக்கிறது. நெப்போலியன் ஐரோப்பியக் கண்டன் முழுவதையுமே சலக்கிக் கதி கலங்கச் செய்துகொண்டிருநத சமயத்தில், ஜெர்மனியில் அமைதியாக ஒரு வீட்டில் வசித்துக்கொண்டு ஜெர்மன் மொழிக்கு அகராதியும், இலக்கணமும் தயாரித்துக்கொண்டும் ஜெர்மனிய நாடோடிக் கதைகளைத் தேடிச் சேகரித்துக் கொண்டும் தாய் மொழிக்கு இணையற்ற சேவை புரிந்தவர்களும், இன்று வரையிலும் அறிஞர்களால் பாராட்டப் பெறுகிறவர்களுமான கிரிம் சகோதரர்களைத் தான் நம் கவிராயருக்கு உவமானமாகச் சொல்லலாம். ஆனால் கிரிம் சகேதாரர்கள் சொந்தமாக இலக்கியம் எதுவும் படைக்கவில்லை. நம் அருணாசலக் கவிராயரோ அரியதொரு நாடக இலக்கியத்தையே படைத்துக் கொடுத்திருக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ராம நாடகம் - நாடகக் கலைக் கட்டுரைகள், கவிராயர், போல், நாடகம், அருணாசலக், என்பது, பாத்திரங்கள், நாம், வந்து, ராவணன், இணையற்ற, அவருடைய, பிள்ளை, நாடகத்தை, அவர், வயதில், நாடகப், வகையில், ", கட்டுரைகள், கலைக், நாடகக், படைகளும், ராமன், தமிழ், தருமபுரம், சிற்றேறி, கிரிம், பிறகு, இருந்து, ஊரில், வேறொரு, மொழிக்கு, ஆண்டுகள், காலம், காலத்தில், வாழ்ந்த, முதலியார், அருணகிரி, இவ்வளவு, வாழ்ந்து, இயற்றி, செட்டியார், சமயத்தில், தமிழைக், கொண்டு, சுவையை, இன்றைய, ஆனால்", பாடியிருக்கிறார், drama, arts, கலைகள், போது, பாமர, மக்களின், இருக்கிறது, வேண்டும், என்பதை, செய்து, நாடக, தமது, பேசினால், கவிராயருக்கு, இருந்த, நமக்குப், சிறந்த