எனது நாடக அனுபவங்கள் - கவியோகி சுத்தானந்த பாரதியார் - நாடகக் கலைக் கட்டுரைகள்
ஷேக்பியர் நாடகங்கள்
நான் இளமையில் ஆங்கிலச் சூழலில் வளர்ந்து ஆங்கிலமே அதிகமாகப் படித்ததால் ஷேக்ஸ்பியரிடம் எனக்கு அளவு கடந்த ஆர்வமும் அன்பும் ஏற்பட்டது. என் அண்ணன்மார் சிறந்த ஆங்கிலப்புலவர்கள். அவர்கள் ஷேக்ஸ்பியர் Route-ledge (ரௌட் லெட்ஜ) பதிப்பை வைத்துப் படித்தனர், நடித்தனர். அந்த நடிப்பில் என்னையும் சேர்த்துக் கொண்டதுண்டு. ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட், ஓதெல்லோ, கிங் லியர், மாக்பெத், ரோமியோ ஜூலியட், வெனிஸ் வர்த்தகன், கிளியபாத்தரா முதலிய நாடகங்கள் இணையற்றவை. இன்றுகூட நான் ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் படிக்கிறேன். அந்த மாதிரித் தமிழில் நாடகங்கள் வரவேண்டும் என்று நான் முயன்றேன். என் காலத்திற்குப் பிறகு தான் நான் இலக்கியத் தோட்டத்தில் நாட்டிய மரங்கள் பழுத்து உலகிற்குப் பயனாகலாம். என் கடமையை அடக்கமாகச் செய்து முடித்து விட்டேன்.
ஷேக்ஸ்பியருக்கு அடுத்தபடி என்னைக் கவர்ந்தது காளிதாஸனின் சகுந்தலமும், விக்ரம ஊர்வசியும். இரண்டையும் சமஸ்கிருதத்திலேயே நான் படித்து நடித்தேன்.
பிரேஞ்சு நாடகங்கள்
அடுத்தபடியாக, பிரெஞ்சில் மோலியர், ரஸ“ன், கொர்நெல் ஆகிய மூவர் நாடகங்களும் என்னை ஈர்த்தன. இவர்களைப்பற்றித் தமிழில் நூல்கள் எழுதியுள்ளேன். ரஸ“னின் அதாலி, அந்த்ரோமாக் கொர்நெலின் ஸ“த் (Cid) ஓராசியன், மோலியரின் மிசாந்திரோப், லவார் (கருமி), டான் ஜூவான், பறக்கும் டாக்டர் முதலிய நாடகங்கள் பல நகைச்சுவை பொதிந்தன. நகைச்சுவைக்கு மோலியரும், வீரச்சுவைக்கு கொர்நெலும், கலைச்சுவைக்கு ரஸ“னும், வாழ்வின் நவரசங்களுக்கு ஷேக்ஸ்பியரும் எனக்குச் சிறந்த வழிகாட்டிகளாயிருந்தனர். விக்தர் ஹ்யுகோவின் ஹெர்நானியும் கிராம்வெல்லும், கெத்தேயின் ஃபௌஸ்டும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. இந்த நாடகங்களை கற்றதன் பயனாக எனக்கு நல்ல கலை நாடகங்கள் எழுத எழுச்சி பிறந்தது. எனது நாடகங்களை நானே நடித்து நடித்து எழுதுவதுண்டு; பாடல்களை நானே பாடி அபிநயம் பிடித்து ஆடுவதும் உண்டு. எனது நாடகங்கள் சில மேடையேறியப் புகழ் பெற்றன.
அந்தக் காலப் புலவர்
அந்தக் காலம் எனது நாடகங்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டவர்கள் சிவகங்கை அரண்ம€னை டில்லி பாச்சாத் தேவர், சின்ன அரண்மனை சிங்கத் துரை, தெய்வ சிகாமணி புலவர், பெரியசாமித் தேவர் முதலிய தமிழறிஞர். நாடகப் புலவருள் பொன்னம்பலம் ஆசாரி, ராஜாராவ், சுந்தரராவ், கோவிந்தசாமி, மதுரை G. ராமசாமி ஐயர் முதலியோர், G. ராமசாமி ஐயர் ஷேக்ஸ்பியர் நாகடகங்களைத் தாமே நடித்துக் காட்டினார். (Mono actor)
சில நாடகங்கள்
செய்யுள் நாடகம், இசை நாடகம் (ஆபரா), சரித்திர நாடகம், சமுதாய நாடகம், புது யுக சமயோக நாடகம் என்று வகை வகையாகப் பிரித்து நான் நாடக இலக்கியங்களை மன எழுச்சியால் எழுதியுள்ளேன். எனது நாடகங்களில் மேடையேறியவற்றை இங்கே தருகிறேன்.
1. காலத்தேர் 2. வசந்தா சுந்தரி 3. ஜயமணி 4. இராணி மங்கம்மாள் 5. புதுமையும் பழமையும் 6. இவளும் அவளும் 7. சுபத்ரா கலியாணம் 8. விசாஸ்திரம் 9. நக்கீரர் நாவீறு 10. பத்மாவதி 11. தேவகுமாரி 12. ராணா பிரதாப சிங்கன் 13. சிவாஜி-ராமதாஸ் 14. சிரிப்பில் விளைந்த நெருப்பு 15. பூதானப் புரட்சி 16. சத்தியாக்கிரகம் 17. சகுந்தலம் 18. ஜ“வமுரளி 19. விஞ்ஞானக் கூத்து 20. அப்பரின் அற்புதம் 21. மாணிக்க ஜோதி 22. ஜோதி ராமலிங்கம் 23. ஜய ஜவான் 24. முல்லை மணம் 25. மீரா விஜயம் 26. வளையாபதி 27. குண்டலகேசி 28. ஜயவீரன் 29. புத்தர் கருணை 30. žர்த்திருத்தம் 31. கண்ணகி 32. காமதிலகன் 33. மாயமான் 34. இராமதூதன் 35. ஏழை முருகன் 36. வானரசு முதலியன. இந்த நாடகங்கள் பெரும்பாலும் நூல் வடிவில் உலாவுகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனது நாடக அனுபவங்கள் - கவியோகி சுத்தானந்த பாரதியார் - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடகங்கள், எனது, நாடகம், நான், நாடக, முதலிய, ஷேக்ஸ்பியர், கட்டுரைகள், பாரதியார், சுத்தானந்த, கவியோகி, அனுபவங்கள், நாடகக், கலைக், நானே, நடித்து, அந்தக், புலவர், ராமசாமி, ஜோதி, ஐயர், நாடகங்களை, தேவர், எனக்கு, கலைகள், arts, drama, சிறந்த, அந்த, தமிழில், நாடகங்களைப், எழுதியுள்ளேன்