தமிழ் நாட்டில் நாடக வளர்ச்சி - நாடகக் கலைக் கட்டுரைகள்
இன்று தமிழ் சினிமாவுலகில் இருந்து வரும் நடிகர்கள் பெரும்பாலும் பாய்ஸ் கம்பெனிகளிலிருந்து பயிற்சி பெற்று வந்த நடிகர்களேயாவர். நாடகவுலகம் அழிந்திருந்தால் சினிமாவுக்கு நடிகர்களே கிடைத்திருக்கமாட்டார்கள். இன்றும் நடன நாடக மேடைகளே சினிமாவுக்கு நடிக நடிகையரை உற்பத்தி செய்யும் நிலையங்களாக இருந்து வருகின்றன.
1935-ம் ஆண்டுக்குப்பின் சமுதாய முற்போக்கு நாடகங்களில் மற்றுமொரு மறுமலர்ச்சியேற்பட்டது. பிறமொழிக் கதைகளைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட சில நாடகங்கள் நாடக மேடைகளில் நூற்றுக்கணக்கில் தொடர்ந்து நடைபெற்றன. இவற்றில் டி.கே.முத்துசாமி எழுதிய குமாஸ்தாவின் பெண், பா.ஆதிமூலம் - சோமசுந்தரம் எழுதிய 'மனிதன்' முதலிய நாடகங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை.
தமிழ் நாட்டு மக்களைக் கவர்ந்த முற்போக்கு நாடகங்களில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய அந்தமான் கைதி, ப.நீலகண்டன் எழுதிய முள்ளில் ரோஜா, நாம் இருவர், அறிஞர் சி.என்.அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி, ஓர்இரவு, எஸ்.வி.சகஸ்ரநாமம் எழுதிய பைத்தியக்காரன், ரா.வேங்கடாசலம் எழுதிய பெண், மனைவி, நாரணதுரைக்கண்ணன் எழுதிய உயிரோவியம், நா.சோமசுந்தரம் எழுதிய இன்ஸ்பெக்டர், சின்னராஜ" எழுதிய இரத்தக்கண்ர், எஸ்.டி.சுந்தரம் எழுதிய மனிதனும் மிருகமும், 'கல்கி' கிருஷ்ணமூர்த்தியின் கள்வனின் காதலி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த இழந்த காதல், ஐம்பதும் அறுபதும், விலாங்கு மனிதன் முதலியவற்றைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். இந்த நாடகங்களில் பெரும்பாலானவை சினிமாப் படங்களாகவும் வெளிவந்துவிட்டன.
ஆங்கில மோகத்தால் தாய்மொழிப் பற்றிழந்து புதிய நாகரிகத்தில் மயங்கியிருந்த மக்களுக்கு விழிப்பூட்டும் முறையில் சில நாடகங்கள் மேடையைக் கவர்ந்தன. இவற்றில் எதிராஜ" எழுதிய ஒளவையார், சூலமங்கலம் பாகவதர் எழுதிய சிவலீலா ஆகியவை ஒரே தியேட்டரில் தொடர்ந்து நூற்றுக்கணக்கான நாட்கள் நடைபெற்றவை. இந்த வரிசையில் சில சரித்திர நாடகங்களும் தோன்றின. இந்தியாவில் முதன் முதலாகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடித் தூக்குமேடையில் பலியான வீரபாண்டியக் கட்டபொம்மனின் வரலாற்றை 'முதல் முழக்கம்' என்ற பெயரால் ரா.வேங்கடாசலம் மேடை நாடகமாக ஆக்கியுதவினார். இவர் 'இமயத்தில் நாம்' என்று மற்றொரு பிரசித்தி பெற்ற சரித்திர நாடகத்தையும் எழுதியிருக்கிறார். கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய 'தமிழ்ச் செல்வம்' என்ற நாடகம் மிகச் சிறந்த புதிய முறை நாடகமாகவும், கல்விப் பிரசார நாடகமாகவும் கருதப்படுகிறது. அரு.இராமநாதன் எழுதிய 'இராஜ ராஜ சோழன்' என்ற சரித்திர நாடகம் இன்று தமிழ் நாடக ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.
அமெச்சூர் நாடகவுலகிலும் வி.சி.கோபாலரத்னம் எழுதிய இராஜபக்தி, தேவன் எழுதிய துப்பறியும் சாம்பு, கல்யாணி, மைதிலி, "நாரதர்" சீனிவாச ராவ் எழுதிய சரஸா முதலிய நாடகங்கள் மேடைகளில் பலமுறை நடிக்கப் பெற்றவை. பிரசித்திபெற்ற தமிழ் எழுத்தாளரான 'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, மோகினித் தீவு ஆகிய நாவல்களும் நாடகமாக நடிக்கப்பட்டு வருகின்றன. புதிய புதிய கருத்துகளைக் கொண்ட சமுதாய முற்போக்கு நாடகங்கள் நாடெங்கும் நடிக்கப்பட்டு வருகின்றன.
சினிமா வளர்ச்சியால் கலையம்சத்தைப் பொறுத்தவரையில் நாடக வளர்ச்சி குன்றிவிடவில்லை. ஆனால், மற்றொரு கஷ்டம் ஏற்பட்டது.
நிரந்தரமான வருவாயை முன்னிட்டு நாடகத் தியேட்டர்களையெல்லாம் சினிமாத் தியேட்டர்களாக்கி விட்டதால் நாடகம் நடிப்போருக்குத் தியேட்டர் கிடைப்பது அரிதாகிவிட்டது. இன்று வேகமாக வளர்ந்துவரும் தமிழ் நாடக மேடை வளர்ச்சிக்குத் தடையாயிருப்பது தியேட்டர்கள் இல்லாத குறைதான். இதன் விளைவாக நிரந்தரமாக நடைபெற்று வந்த நாடக சபைகள் ஒன்றன்பின் ஒன்றாக மடிந்து வருகின்றன.
இன்று மிகுந்த சிரமத்துக்கிடையிலும் நிரந்தரமாக நடந்துவரும் பெரிய நாடக சபை நவாப் இராஜமாணிக்கம் அவர்களின் பாய்ஸ் கம்பெனி ஒன்றுதான். பெரும்பாலும் மற்ற நாடகக் கம்பெனிகளெல்லாம் ஸ்பெஷல் நாடக சபைகளாகவே நடந்து வருகின்றன. நவாப் இராஜமாணிக்கம் நடத்தும் இராமாயணம், தசாவதாரம், குமார விஜயம், சபரிமலை ஐயப்பன், சக்திலீலா, ஏசுநாதர், இராமதாஸ் முதலிய நாடகங்கள் இன்றும் மிகவும் வெற்றிகரமாகத் தொடர்ந்து நூற்றுக்கு மேல் நடைபெற்று வரும் நாடகங்களாகும்.
நாடகக்கலை வளர்ச்சிக்காக 1944-ல் ஒரு மகாநாடு கூட்டி, சர்க்காருக்கு எங்கள் குறைகளையெல்லாம் எடுத்துச் சொன்னோம். இதைத் தொடர்ந்து மூன்று நாடகக் கலை மாநாடுகள் ஆண்டுதோறும் நடைபெற்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நாட்டில் நாடக வளர்ச்சி - நாடகக் கலைக் கட்டுரைகள், எழுதிய, நாடக, தமிழ், நாடகங்கள், வருகின்றன, நாடகக், இன்று, வளர்ச்சி, நாடகம், தொடர்ந்து, கட்டுரைகள், நாடகங்களில், கலைக், முதலிய, சரித்திர, முற்போக்கு, நாட்டில், கிருஷ்ணமூர்த்தியின், சினிமா, மேடை, கல்கி, வேங்கடாசலம், பெற்றவை, நாம், நாடகமாக, மற்றொரு, நவாப், இராஜமாணிக்கம், நடைபெற்று, நிரந்தரமாக, நாடகமாகவும், நடிக்கப்பட்டு, பிரசித்தி, arts, பாய்ஸ், பெரும்பாலும், வரும், சமுதாய, drama, சினிமாவுக்கு, இன்றும், மேடைகளில், இருந்து, சோமசுந்தரம், மனிதன், பெண், கலைகள், நடைபெற்றன, இவற்றில், வந்த