புலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும் - நாடகக் கலைக் கட்டுரைகள்
பேர்டோல்ட் பிறெக்யுன் 'யுகதர்மம்' நாடகத்தில் சுரண்டலும் பேராசையும் வன்முறையுமே அங்கீகரிக்கப்பட்ட சமூக நியதியாக மாறிவிடும் கொடூரப்போக்கு மிக எளிமையாக வெளிப்படுகிறது. தாகத்தால் தவித்துக் கிடக்கும் ஒரு கொடூரமான வியாபாரிக்கு அவனால் வதைக்கப்பட்ட ஒருவன் தண்ர் தர முன்வந்திருப்பான் என்பதையே நீதிமன்று ஏற்க மறுத்துவிடுகிறது. அவன் வியாபாரியைக் கொல்ல முயல்வதுதான் நடைமுறைச் சாத்தியமானது என்று தீர்ப்பு எழுதும் சமூக வக்கிரத்தை இந்த நாடகம் சித்தரிக்கிறது.
இன்றைய உலகில் அரசியல் உரிமை கோரும் இடங்கள் அனைத்திலும் அவை கொடூரமாக நிராகரிக்கப்பட்டு, மனித உரிமைக்காகக் குரல் கொடுப்போர் எவ்வளவு அநாகரிகமான சித்திரவதைகளை எதிர்கொள்கின்றனர் என்பதை ஹரோல்ட் பின்ரரின் 'போகிற வழிக்கு ஒன்று' நாடகம் நுட்பமாகச் சித்தரிக்கிறது. 'மழை'யில் தனிமனித Ego க்கள், பாலியல் அழுத்தங்கள், ஏமாற்றங்கள், வெறுப்புணர்வுகள், சமூக அங்கீகாரத்திற்கு தனிமனித விருப்பு வெறுப்புகளை பலிகொடுத்துவிடும் மனப்பாங்குகள் போன்றன ஆழமாகக் கையாளப்பட்டுள்ளன.
தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகம், அதன் குறுகிய புகலிட வாழ்வில் மேற்கொண்ட நாடக முயற்சிகள் பற்றிய தன்னில் சார்ந்த ஒரு விபரணக் குறிப்பு இது. எமது ஆற்றல்களின், ஆளுமைகளின் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள், அந்நியச் சூழலில் நாம் மேற்கொள்ள முடிந்த நாடக முயற்சிகள் இவை. நாடக அரங்கினை இன்னும் செழுமையான கட்டங்களுக்கு எடுத்துச்செல்ல இன்னும் ஆழ்ந்த செய்கைகளும் கடினமான உழைப்பும் பரந்த ஆதரவும் பெருமளவில் தேவையாகி நிற்கிறது.
8. சான்றாதாரங்கள் :
(1) Christopher Mc Donell "A Tamil Asylum Diaspora" Srilankan Migration, Settlement and Politics in Switzerland (Providence 1996) p69.
(2) Rajan Hoole; et al. Broken Palmyrah; Tamil Crisis in Srl Lanka, An inside Account (California 1989) p418
(3) Some One else's War; UTHR Colombo p114
(4) மு. நித்தியானந்தன், புதுமை தை-பங்குனி 1990 ஜேர்மனி
(5) மு. நித்தியானந்தன், வீரகேசரி வாரமலர் 1998
(6) சு. மகாலிங்கசிவம் (மாலி), லண்டனில் அரங்கேற்றங்கள். நாழிகை, ஜனவரி 1998, லண்டன். பக்கம் 33-34
(7) களரி - பொறுத்தது போதும், நாடக மலர், 06.11.94
(8) Dr.S. சிறீதரனின் விமர்சனக் குறிப்பு 1985 (பிரசுரமாகாத கையெழுத்துப் பிரதி)
(9) சி. சிவசேகரம், லண்டனுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் நாடக மேடை தமிழர் நலன்புரிச் சங்கம் (நியூகம்) 1995 ஆம் ஆண்டு அறிக்கையும் 10ஆம் ஆண்டு நிறைவுச் சிறப்பு மலரும். லண்டன் 1996
(10) காவலூர் ராசதுரை, வீரகேசரி வாரமலர், 04.6.1996.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும் - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடக, கலைக், கட்டுரைகள், புலம்பெயர், நாடகம், சமூக, நாடகக், அரங்கு, வளர்ச்சியும், பிரச்சினைகளும், நித்தியானந்தன், tamil, வீரகேசரி, ஆண்டு, வாரமலர், இன்னும், லண்டன், தமிழ், arts, drama, கலைகள், சித்தரிக்கிறது, முயற்சிகள், தனிமனித, குறிப்பு