அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
வலிப்பு பற்றி சொல்ல வேண்டும் என்றால். சிறுவயதிலிருந்தோ அல்லது மணமான பிறகோ வலிப்பு நோயால் பாதிக்கப்படும் பெண்கள் அதற்கான சிகிச்சை எடுத்து முதலில் வலிப்பை குணப்படுத்திவிட்டு, பிறகு கர்ப்பம் தரிக்கலாம் என்றுதான் பெரும்பாலும் நினைக் கின்றனர்.
உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? ஒரு முறை வலிப்பு வந்துவிட்டால் எப்பொழுது வேண்டுமானாலும் அது திரும்ப வரலாம். முழுக்க அதனை குணப்படுத்தி விட்டோம் என்று சொல்ல முடியாது. அதனால் வலிப்புக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டேதான் கர்ப்பம் ஆக வேண்டி இருக்கும்! குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு வருமோ என்று வலிப்புக்கான மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்தக்கூடாது. அது தாயின்உயிருக்கே உலை வைத்துவிடலாம்.
இவர்களுக்குப் பிரசவ சமயத்தில் டாக்டரின் அதீத கவனிப்பு தேவை. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் ‘பிரசவ வலி வரட்டும்.. பிறகு, மருத்துவ மனைக்கு போகலாம்’ என்று காத்திருக்காமல் பிரசவ தேதி இதுவாகத்தான் இருக்கும் என்று டாக்டர் குறிப்பிடும் நாளுக்கு ஓரிரு நாட்கள் முன்னமே மருத்துவமனைக்குச் சென்றுவிடுவது நல்லது.
வலிப்பு நோய் உள்ளவர் கள் கருவுற்றதும் மருத்துவரிடம் வரும்போதே, தனக்கு அந்நோய் உள்ளது என்று கூறிவிடுவது நலம். அப்படி சொல்லாமல் விடும் பட்சத்தில், பிரசவ சமயத்தில் வலிப்பு வந்தால் அது பிரசவகால வலிப்பா, இல்லை எப்போதும் வரும் வலிப்பா எனத் தெரியாமல் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில் குழப்பம் ஏற்படும்.
ஆஸ்துமா:
இந்த பாதிப்பு உள்ளவர் களும் கர்ப்பகாலத்தில் சிறப்பு கவனத்தோடு கவனிக்கப்பட வேண்டியவர்கள். ஆஸ்துமா உள்ளவர்கள் பொதுவாக தங்கள் ஆரோக்கியத்துக்கு எதிரானது என்று எதிலெல்லாம் மிகுந்த கவனத்துடன் இருப்பார்களோ அதிலெல்லாம் கர்ப்ப காலத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். திருவிழா போன்ற நெரிசல் மிகுந்த இடங்களிலும், தூசி நிறைந்த இடங்களிலும் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். அதையும்மீறி ஏதேனும் பாதித்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனை யுடன் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக டி.பி. எனப்படும் காசநோய்.
இந்த நோயை வந்த வேகத்திலேயே விரட்டும் அளவுக்கு மருத்துவம் இப்போது முன்னேறிவிட்டது. ஆனாலும் டி.பி-யால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதற்கான மருந்து சாப்பிடும் சமயத்தில் கருத்தரிக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் டி.பிக்கான மருந்துகளின் வீரியம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தையையும் பாதிக்கும்!
கர்ப்பகாலத்தில் ஏற்படும் தலைவலி, காய்ச்சல் போன்ற தொல்லைகளுக்கு வழக்கமான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா? கூடாதா? இதுபற்றி இரண்டுவிதமான கருத்துக்கள் நிலவுகிறதே..
பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் காய்ச்சல், தலைவலி என்று எந்த தொல்லை வந்தாலும் அதற்கான மருந்துகளை சாப்பிட மறுக்கிறார்கள், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தில்! தானாக மருந்துக் கடைகளில் கேட்டு எதையாவது வாங்கி விழுங்குவதுதான் தவறே தவிர, டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதில் ஒரு தவறும் இல்லை. சொல்லப் போனால், அப்போது மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் விடுவதுதான் தவறு. தொந்தரவுகள் முற்றிவிடும். கர்ப்பகாலத்தில் என்ன பிரச்னை என்றாலும் உங்கள் உடல்நிலையை நன்கு பரிசோதித்த பிறகே மருத்துவர்கள் எந்த மாத்திரையும் கொடுப்பார்கள். காய்ச்சலை சரிப்படுத்த கர்ப்பிணி சாப்பிடும் மருந்தால் கருவுக்கு பாதிப்பு வராது. ஆனால், மருந்து சாப்பிடாமல் காய்ச்சலை வளரவிடும்போதுதான் அந்தக் காய்ச்சல் கிருமிகளால் கருவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
இந்த நாளில் பிரசவம் நடைபெறும் என்று டாக்டர்கள் சொல்லியிருந்தாலும், மிகச்சரியாக இதோ இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்துவிடும் என்பதை கர்ப்பிணியே உணர்ந்து கொள்வது எப்போது?
பிரசவம் எப்போது நடக்கும் என்பதை எவ்வளவு அனுபவப்பட்ட டாக்டராலும் மிகத்துல்லியமாக சொல்ல முடியாது. கடைசி மாதவிலக்கு தேதியை மனதில் கொண்டு தோராயமாகத்தான் பிரசவ தேதி கணிக்கப்படுகிறது.
ஆனாலும், பிரசவத்துக்கான அறிகுறியாக இயற்கையே மூன்று விதமாக எச்சரிக்கை ஒலி எழுப்புகிறது. பிரசவ வலி, ஷோ, பனிக் குடம் உடைவது ஆகியவைதான் அந்த மூன்று அறிகுறிகள்.
பிரசவ வலி என்பது மாதவிலக்கு சமயத்தில் வருவதுபோல் இருக்கும். இடுப்பின் மேலிருந்து கீழாக வலி எடுக்க ஆரம்பிக்கும். தொடர்ச்சியாக இல்லாமல் விட்டுவிட்டு வலிக்கும்.ஹார்மோன் சுரப்பு விகித மாறுபாடுதான் இதற்குக் காரணம்.
கருப்பையில் குழந்தை முழு வளர்ச்சி அடைந்து தலை நன்றாக இறங்கியதும் ஹார்மோன் சுரப்பு அளவு மாறுபடும். உடனே வலி ஏற்பட்டு பிறகு கருப்பையின் கழுத்து மெள்ள விரிவடையும். பிறகு, கருப்பையின் தசைகள் சுருங்கி விரிந்து மெள்ள மெள்ள தலை, நெஞ்சு என்று கொஞ்சம் கொஞ்சமாக குழந்தை வெளியே தள்ளப்படும்.
கருப்பை அளவுக்கு சுருங்கி விரியும் தன்மை உடலில் வேறு எந்த பாகத்திற்கும் இல்லை. பத்து நிமிடம், இருபதுநிமிடம் என்று விட்டு விட்டுத்தான் பிரசவவலி வரும். அப்படி வருவதுதான் தாய்க்கும் நல்லது. குழந்தைக்கும் நல்லது. வலி வராத அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கான ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வலி ஏற்பட்டவுடன் இந்த ரத்த ஓட்டம் தடைபட்டு விடுகிறது!
சளி கலந்த ரத்தம் பிறப்புறுப்பின் வழியாக வெளியேறுவதுதான் ‘ஷோ’ என்று சொல்லப்படுகிறது. கருப்பையின் கழுத்துப் பகுதி திறக்க ஆரம்பித் ததும் அங்கே இந்த திரவம் சுரக்கும்.
கருவிலிருக்கும் குழந்தை, கருப்பை வழியாக இறங்கத் தொடங்கியதுமே குழந்தையைச் சுற்றியிருக்கும் பலூன் போன்ற பனிக்குடத் தின் ஒரு பகுதியும் இறங்கும். சில சமயம் அந்த பலூன் பாகம் உடைந்துவிட்டால் உள்ளே இருக்கும் நீர், பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதை புரிந்துகொள்ளாமல் சில பெண்கள் தங்களுக்கு அதிகப்படியான சிறுநீர் வெளியேறுகிறது என்று தவறாக நினைக்கிறார்கள்.
வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பனிக்குடம் உடைந்ததுமே மருத்துவ மனைக்கு சென்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் மொத்த பனிக்குட நீரும் வழிந்துவிடும். இது பிரசவத்தை சிக்கலாக்கி விடும்.
இந்தப் பனிக்குட நீர், இளநீர் மாதிரி இருக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும். மாறாக, மஞ்சள் அல்லது பழுப்பு வண்ணத்தில் இருந்தால் உள்ளே குழந்தை மலம் கழித்திருக்கிறது என்று அர்த்தம். அப்படியிருந்தால் இன்னும் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
வாரிசை வரவேற்க ஒரு தாய் உடலளவில் தயாராவது போல, மனதளவிலும் தயாராவது முக்கியம். அதிலும் பிரசவம் என்னும் அற்புதமான நிகழ்வை எதிர்கொள்ள சந்தோஷமும் ஆவலுமாகக் காத்திருத்தல் அவசியம். பிரசவத்தைப் பற்றி மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதில் பாசிடிவ்வான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். மனதைக் குழப்பிக்கொள்ளாமல் எப்போதும் ரிலாக்ஸ்டாக இருக்கவேண்டும். நல்ல எண்ணங்களுடன் இருத்தல், நல்ல படங்களை பார்த்தல், இனிய இசை கேட்டல் போன்றவை புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவும். அழுமூஞ்சி சீரியல் களை இந்த சமயத்திலாவது பார்க்காமல் தவிர்க்கலாமே!
புத்தம்புது உயிர் ஜனிக்கும் இனிய நிகழ்வுதான் பிரசவம். அதைப் பரவசத்தோடு எதிர்கொள்ள வேண்டும். பிரசவம் என்பதே வலியுடன் கூடிய நிகழ்வு தான் என்பதை கூடியவரை நினைவில் வைத்துக்கொண்டால் பிரசவ நேர பயத்தையும் டென்ஷனையும் தவிர்க்கலாம்.
கர்ப்ப காலம் முடிந்து, பேறுகாலம் வந்துவிட்டது என்றால், முதலில் வலி அரை மணி நேரத்துக்கு ஒரு முறைதான் வரும். பின்னர் அது அதிகரிக்கும். வலி என்றாலுமே, 45 நொடி மட்டுமே வலி இருக்கும். பிறகு சிறிது இடைவெளி விட்டுத்தான் அடுத்த வலி வரும். இரு வலிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில், மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளியே விட்டு ரிலாக்ஸ் செய்தால், கர்ப்பப்பை வாய் சுலபமாக திறந்து, பிரசவம் எளிதாக, சுகமாக நடைபெற உதவும்.
பிரசவ வலி ஆரம்பித்ததும் கருப்பையின் வாய் திறந்து குழந்தை வெளியே வர குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் ஆகும். அந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குள் கருப்பையின் வாய் திறக்கவில்லை என்றால், வலியை அதிகப்படுத்த ஆக்ஸிடோஸின் டிரிப் தரப்படும். அப்புறமும் வலி அதிகமாகவில்லை என்றால் டாக்டரே பனிக்குடத்தை உடைத்துவிட்டு பிரசவம் பார்ப்பார்.
கருப்பை வாய் திறந்து குழந்தையின் தலை தெரிந்தவுடன் குழந்தையை பத்திரமாக வெளியே கொண்டு வரும் வேலைகள் ஆரம்பமாகும். அந்த நேரத்தில், குழந்தை வெளியே வர இயலாத அளவுக்கு பெண்ணுறுப்பில் சிக்கல் இருப்பின் வஜினாவை லேசாகக் கத்தரித்து துளை விரிவாக்கப்படும். ‘எபிசியோட்டமி என்று சொல்லப்படும் இந்த காரியத்தை பெரும்பாலும் முதல் குழந்தையை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்குத்தான் செய்வார்கள்.
குழந்தையின் தலை தெரிய ஆரம்பித்த அரைமணி நேரத்துக்குள் குழந்தை பிறந்துவிட வேண்டும். கர்ப்பிணி எந்த அளவுக்கு முக்கி முக்கிக் குழந்தையை வெளித்தள்ள முயற்சிக்கிறாரோ அந்த அளவுக்கு குழந்தை சீக்கிரமாகவும் சுலபமாக வும் வெளியே வரும்.
சவுக்கால் அடித்ததுபோலவும், உலகிலுள்ள அத்தனை வலிகளையும் ஒருசேர போட்டு அழுத்தியது போலவும் பிரசவ வலி கஷ்டப்படுத்தினாலும், அத்தனையும் தான்பெற்ற குழந்தையை முதன்முதலாக பார்க்கும் அந்த மந்திர நிமிடத்தில் மாயமாக மறைந்துவிடும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பெண்கள், குழந்தை, பிரசவ, வேண்டும், இருக்கும், வலிப்பு, பிரசவம், வெளியே, வரும், அந்த, பிறகு, பாதிப்பு, அளவுக்கு, கட்டுரைகள், கருப்பையின், வாய், articles, அதற்கான, சமயத்தில், நல்லது, குழந்தையை, என்றால், எந்த, அம்மாவாகும், கர்ப்பகாலத்தில், கருப்பை, இல்லை, கர்ப்ப, வழியாக, என்பதை, மருத்துவக், ladies, women, வழிகாட்டி, பெண்களுக்கு, அன்பான, சொல்ல, திறந்து, மருந்து, காய்ச்சல், மெள்ள, எப்போது, கொண்டு, மூன்று, அந்தக், மாதவிலக்கு, இன்னும், சுரப்பு, ஹார்மோன், நீர், இனிய, நல்ல, எதிர்கொள்ள, உதவும், நேரத்தில், குழந்தையின், நேரத்துக்குள், சுலபமாக, தயாராவது, பனிக்குட, இடைப்பட்ட, விட்டுத்தான், விட்டு, ரத்த, ஓட்டம், கருவுக்கு, உள்ளே, பலூன், சுருங்கி, காலத்தில், டாக்டரின், எடுத்துக், ஏதேனும், குழந்தைக்கு, பாதிக்கப்பட்ட, மருத்துவ, உள்ளவர், தேதி, மனைக்கு, முடியாது, பெரும்பாலும், பற்றி, section, பகுதி, அல்லது, நோயால், கர்ப்பம், முதலில், சிகிச்சை, அப்படி, விடும், தலைவலி, சாப்பிடும், ஆனாலும், மாத்திரைகளை, டாக்டர்கள், காய்ச்சலை, நன்கு, என்ன, மருந்துகளை, இடங்களிலும், மருத்துவர்கள், எப்போதும், வலிப்பா, ஏற்படும், ஆஸ்துமா, இருக்க, மிகுந்த, கவனத்தோடு, கர்ப்பிணி