பருவமடையும் வயது தொடக்கம் மெனோபோஸ்! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
மாதவிடாய் ஆரம்பிக்கும் வயது வந்த பெண் ஒருவர் பருவமடையாமல் விட்டால் அது குறித்து ஹோர்மோன் பரிசோதனை செய்ய வேண்டும். இதில் இருக்கும் குறை நிறைகள் கண்டறிந்து சரியான சிகிச்சைகளை வழங்க வேண்டி ஏற்படும். குறிப்பாக இளம் பெண்களின் உயரத்துக்கேற்ற உடல் நிறைக்கட்டுப்பாடும் சரியான உணவு பழக்கமும் உடற்பயிற்சியும் முக்கியப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் இவர்களில் ஒழுங்காக மாதவிடாயும் சூல் முட்டை விருத்தியும் ஏற்படும்.
இளம் பெண்களில் மணம் முடிக்க முன்னர் கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் தடுப்பூசி போடப்பட வேண்டும். கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் HPV எனப்படும் ஒருவகை வைரசினால் ஏற்படுகின்றது. இவ்வைரசை எதிர்க்கக்கூடிய தடுப்பூசியை மணம் முடிக்க முன்னால் போடுவதன் மூலம் கர்ப்பப்பை வாசல் புற்று நோயை தடுக்க முடியும். இவ்வாறான தடுப்பூசி மூன்று போட வேண்டும். முதல் ஊசி போட்டு ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது ஊசியையும் இரண்டாவது ஊசிபோட்ட ஆறு மாத காலப்பகுதியில் மூன்றாவது ஊசியும் போடவேண்டும்.
மேலும் இளம் பெண்கள் மணம் முடிக்க முன்னர் ருபெல்லா எனப்படும் ஜேர்மன் சின்னமுத்து நோயை தடுக்கக் கூடிய ஊசியையும் போட வேண்டும். ருபெல்லா நோயானது கர்ப்பகாலத்தில் ஏற்பட்டால் பெண்ணின் வயிற்றில் வளரும் சிசுவை தாக்கக் கூடும் இதனால் பல அங்கவீனக் குறைபாடுகளுடன் சிசுக்கள் பிறக்க கூடும் எனவே இவ்வாறான நோய்களை தடுக்கக் கூடிய முக்கியமான தடுப்பூசிகள் பருவமடைந்த பெண்களில் மணம் முடிக்க முன்னர் போடுவது அவசியமாகும்.
நடுத்தர வயதுடைய பெண்களின் கர்ப்பப்பையில் பைப்புரொயிட் கட்டிகள் சூலகக்கட்டிகள் பொலிசிஸ்ரிச் ஒவரி மற்றும் சொக்கிலேட் சிஸ்ட் எனப்படும் நோய்கள் அதிகம் ஏற்படுகின்றது. இதனை சரியான ஸ்கான் பரிசோதனையில் கண்டறிந்து நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சைகள் வழங்க வேண்டும். பலருக்கு மருந்துக்கள் மூலம் சிகிச்சை வழங்கினால் போதுமானது சிலருக்கு சத்திர சிகிச்சைகள் அவசியமாகின்றது. சத்திர சிகிச்சைகளும் வயிற்றை பெரிதளவில் வெட்டாமல் லப்ரஸ்கோப்பி எனப்படும் இலகுவான சத்திரசிகிச்சை மூலம் மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது. இதன் மூலம் பெண்கள் ஒரே நாளில் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்லக்கூடியதாக இருக்கும். அத்துடன் சத்திரசிகிச்சைக்கு பின்னரான வயிற்று வலியும் குறைவாகக் காணப்படும். இவ்வாறான லப்பிரஸ்கோப்பி சத்திரசிகிச்சை பெண் நோயியலில் முக்கிய பங்காற்றுகின்றது. எனவே பெண்களின் வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஸ்கான் பரிசோதனை சரியான தீர்வை வழங்கும். சரியான நோயை கண்டறிந்து சரியான சிகிச்சை அளிக்க உதவும்.
இன்றைய காலகட்டத்தில் மணம் முடித்த பல தம்பதிகள் குழந்தைப் பாக்கியத்துக்கு ஏங்குகின்றனர். இவர்களை சரியாகப் பரிசோதித்து சரியான காரணங்களை கண்டறிந்து சரியான தீர்வு வழங்குவது அவசியமாக உள்ளது. எனவே, குழந்தை பாக்கியத்தை துரிதப்படுத்துவதற்கான சிகிச்சைகளாக ஆண்களின் விந்து அணுக்களை கூட்டுவதற்கும் பெண்களின் சூல் முட்டை வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கும் பலோபியன் குழாய் அடைப்புகளை எடுப்பதற்கும் கருக்கட்டுவதற்காக சிகிச்சைகள் வழங்குவதும் செயற்கை முறையிலான கருகட்டலான IUI மற்றும் IVF சிகிச்சைகள் வழங்குவதும் அவசியமாகின்றது. இதற்கான நவீன சிகிச்சை முறைகள் நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்படுகின்றது. அதுமட்டுமல்ல அயல் நாடான இந்தியா சென்று பல சிரமங்களுக்கும் மத்தியில் பல இலட்சம் பண செலவு செய்து பலவித சிகிச்சைகள் மூலம் கர்ப்பம் தரித்தவர்கள் நான்கு அல்லது ஐந்து மாத கால கர்ப்பத்தில் எமது நாட்டுக்கு திரும்பும் போது அவர்களுக்கான சரியான பராமரிப்பை தொடர்ந்து வழங்க வேண்டி உள்ளது.
இவ்வாறு செயற்கை முறை கருக்கட்டலில் கர்ப்பம் தரித்த தம்பதிகளின் மனதில் உள்ள பயமும் எதிர்ப்பார்ப்பும் ஏக்கமும் எப்படி என்பதை புரிந்து அவர்களது தேவைகளை நிறைவேற்றி இறுதியில் ஆரோக்கியமான நிறைமாத குழந்தையை பிரசவித்து கொடுக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது.
மேலும் பெண் நோயியலில் எதிர்பாராத விதமாக தோன்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள், சூலகப் புற்றுநோய்கள் மற்றும் கர்ப்பப்பை வாசல் புற்றுநோய்கள் கண்டறியப்பட்டவுடன் அதற்கான சத்திர சிகிச்சையை வெற்றிகாரமாக மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை நோயில் இருந்து மீட்க உதவி செய்ய வேண்டும். புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட போதும் அந்தக் குடும்பத்தினரது மன நிலைகளை புரிந்து கொண்டு அவர்களது சந்தேகங்களை தீர்த்து வைத்து அடுத்து என்ன செய்வது என்பதற்கான சரியான வழிகாட்டலாகவும் விளங்க வேண்டும். அத்துடன் இது போன்ற புற்று நோய்கள் வராது ஆரம்பத்திலேயே ஒழுங்கான (PAP SMEAR) மற்றும் ஸ்கான் பரிசோதனைகள் செய்வது அவசியமாகும். அதன் முக்கியத்துவம் விளங்காதவர்களுக்கு அதனை புரியவைத்து நோயின் தாக்கங்களிலிருந்து அவர்களை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும்.
மெனோபோஸ் பருவத்தை நெருங்கும் பெண்கள் பலவிதமான பெண் நோயியல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படலாம்.
இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் போது நோய் அறிகுறிகள் தோன்றியவுடனேயே வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
மெனோபோஸ் பருவத்திலிருக்கும் பெண்களும் பல விதமான உடல் உள தாக்கங்களிற்கு உள்ளாகின்றனர். ஆரம்பத்திலேயே தகுந்த வைத்தியரிடம் தமக்குரிய சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதன் மூலம் இத்தாக்கங்களை வெற்றிகொள்ளலாம்.
தமது அன்றாட கடமைகளில் மூழ்கியிருக்கும் பெண்கள், கல்வி, வேலை, குடும்பம், கணவன், பிள்ளைகள் என பல்வேறுபட்ட பொறுப்புகளை சுமப்பதனால் தமது உடல் ஆரோக்கியத்தை கவனிப்பதற்கு நேரமில்லாது நோய்களிற்கு ஆளாகின்றனர். பின்னர் பெரியளவில் நோய் அறிகுறிகள் தோன்றும் போது அவற்றை தாங்கும் வலுவில்லாதவர்களாகின்றனர்.
எனவே, வெவ்வேறு பருவங்களில் பெண்களிற்கு ஏற்படும் பெண்நோயியல் பிரச்சினைகளிற்கு ஆரம்பத்திலேயே வைத்திய ஆலோசனைகளை தகுந்த வைத்தியர்களிடம் பெற்றுக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணலாம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பருவமடையும் வயது தொடக்கம் மெனோபோஸ்! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பெண்கள், சரியான, வேண்டும், மூலம், மெனோபோஸ், கர்ப்பப்பை, மணம், கண்டறிந்து, சிகிச்சைகள், ஏற்படும், கட்டுரைகள், எனப்படும், பருவமடையும், பெண்களின், பெண், முடிக்க, இவ்வாறான, articles, உடல், வயது, உள்ளது, வாசல், ladies, புற்றுநோய்கள், தொடக்கம், போது, சிகிச்சை, ஸ்கான், சத்திர, நோயை, நோய், முன்னர், women, ஆரம்பத்திலேயே, மாதவிடாய், இளம், பெற்றுக், மருத்துவக், செய்ய, வழங்க, வேண்டி, பலவித, இருந்து, பிரச்சினைகளுக்கு, அவசியமாகின்றது, அவசியமாக, தமது, நோயியலில், சத்திரசிகிச்சை, கொள்வதன், அத்துடன், வழங்குவதும், கர்ப்பம், புரிந்து, அவர்களது, தோன்றும், உதவி, செய்வது, அறிகுறிகள், செயற்கை, ஆலோசனைகளை, ஆரோக்கியத்தை, வைத்திய, தகுந்த, தடுப்பூசி, பரிசோதனை, முக்கிய, இருக்கும், சிகிச்சைகளை, சூல், இதன், அவற்றை, வயதாகட்டும், மருத்துவ, section, ரீதியான, சக்கரம், ஆரம்பிக்கும், முட்டை, பெண்களில், கூடிய, தடுக்கக், வயிற்றில், கூடும், அவசியமாகும், ருபெல்லா, மேலும், ஏற்படுகின்றது, புற்றுநோய், புற்று, இரண்டாவது, ஊசியையும், நோய்கள்