பிரசவத்தின் படிமுறைகளும் பிறப்பின் வழிமுறைகளும். - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
.
நிகழ்ந்து விடுவதில்லை

சாதாரணமாக கருவுற்ற பெண்ணுக்கு 280 நாட்களின் முடிவில் குழந்தை பெறுவதற்கான வலி ஏற்படலாம். இது இரு வாரங்கள் முன்னால் பின்னால் நிகழ்வதும் சாதாரணமானது. கருவுற்ற பின் கருப்பை விரிவடையும் போது தாயானவள் ஒரு சிறு அசௌகரியத்தை உணரக் கூடும். மேலும் கருப்பை விரிய விரிய அங்கே காணப்படும் நரம்புகள் முறுக்கப்பட்டு அழுத்தப்படுவதால் வயிற்று நோவு சற்று அதிகமாக நிகழக் கூடும்.
கர்ப்பகாலம் 35 வாரங்களை அண்மிக்கும் போது (கர்ப்பகாலம், கடைசி முதல் மாதவிடாய்த் திகதியிலிருந்து கணிக்கப்படும்) விட்டு விட்டு ஏற்படும் “பிரக்ஸன் கிரிக்“ எனப்படும் குத்துவலி எழும்பும். இவ்வாறான நோக்கள் பல காணப்படும் போது எவ்வாறு உண்மையான பிரசவ வலியை

பிரசவம் ஆரம்ப நிலையிலிருக்கும் போது எனீமா கொடுப்பதன் மூலம் குடலிலிருந்து மலம் அகற்றப்படும் (இல்லாவிட்டால் குழந்தை பிறக்கும் போது தாயின் மலமும் வெளியேறி குழப்பத்தை ஏற்படுத்தி விடும்) இவ்வாறு சுத்தம் செய்த பின் பன்னீர் குடம் உடைக்கப்படும். இதன் போது வெளியேறும் அம்னியன் பாய்பொருளின் நிறம் அவதானிக்கப்படும். பெரும்பாலும் அம்னியன் பாய்பொருள் நிறமற்றதாக அல்லது மெல்லிய வைக்கோல் நிறமுடையதாக இருக்கும் (உண்மையில் அம்னியன் பாய்பொருள் என்பது மென்சவ்வுகளின் சுரப்புக்களையும் குழந்தை கழித்த சிறுநீரையும் கொண்ட திரவமாகும்) பின்னர் பிரசவத்தை விரைவுபடுத்த சின்ரோசினொன் என்ற ஒக்சிரோசின் ஒமோன் ஊசி மூலம் ஏற்றப்படும். தொடர்ந்து குழந்தையின் இதயத் துடிப்பு அவதானிக்கப்படும். குழந்தையின் இதயத் துடிப்பானது “பினாட்” என்கின்ற உடலொலிபெருக்கி மூலமாகவோ அல்லது இயந்திரத்தின் மூலம் வரைபாகவோ (CTG) பெற்றுக் கொள்ள முடியும்
குழந்தை பிறப்பதற்கு அண்மித்த நிலையில் குழந்தையின் தலை வெளியே வர முயற்சிக்கும் இதன் போது வலி உச்ச நிலையை அடையும்.
குழந்தையின் தலை இலகுவாக வெளியே வருவதற்காகவும் தாயின் யோனியின் வழியில் கிழிவுகள் ஏற்படாதிருக்கவும் எபிசியோட்டமி (Episiotomy) என்ற சிறு வெட்டு ஒன்று வெட்டப்படும். தொடர்ந்து தலை வேகமாக வந்து மோதுவதைத் தடுக்க கையால் அணை கொடுக்கப்படும். தலை வெளியே வந்ததும் அந்த நேரம் குழந்தை பெறப்படும் நேரமாகக் குறிக்கப்படும். (உங்கள் சாதகம், கிரகநிலை, செவ்வாய் தோஷம் எனப்படும் இந்த வேளைகளில் சோதிடர்களால் கணிக்கப்படும்.) தலையை தொடர்நது தோள்களும் பின்னர் முழுக் குழந்தையும் வெளியே இழுக்கப்படும். குழந்தை பிறந்தவுடன் தொப்பிள் நாண் கட்டப்பட்டு சூல்வித்தகத்திலிருந்து குழந்தை பிரிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும். குழந்தை பிறந்தவடன் வீரிட்டு அழ வேண்டும். இதுவே குழந்தையின் சுவாச தூண்டல். அவ்வாறு குழந்தை அழாவிட்டால் நாம் அதனை தூண்ட வேண்டி ஏற்படும்.
.

இப்போது சொல்லுங்கள் திரைப்படங்களில் வருவது போல பிரசவம் என்பது பயங்கரமான அனுபவம் இல்லைதானே? என்ன சரியோ நான் சொல்லுறது?
வீரகேசரி
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரசவத்தின் படிமுறைகளும் பிறப்பின் வழிமுறைகளும். - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், குழந்தை, போது, பிரசவ, குழந்தையின், பெண்கள், அல்லது, வெளியே, பின்னர், தொடர்ந்து, பிரசவம், தாய், கட்டுரைகள், சாதாரணமாக, articles, என்பது, பிரசவத்தின், மூலம், கொண்டிருக்கும், அம்னியன், ஒவ்வொரு, வெளியேறும், மருத்துவர், தாயின், விட்டு, இதன், தாய்க்கு, கருப்பைச், ladies, குழந்தையை, போலவும், திரைப்படங்களில், மருத்துவக், குழந்தையைப், பிறப்பின், படிமுறைகளும், women, வழிமுறைகளும், பாய்பொருள், மலம், வேண்டும், அவதானிக்கப்படும், நிலையை, இருக்கும், சிலவேளைகளில், என்ன, அறுவைச், மணித்தியாலங்கள், சிகிச்சை, பட்சத்தில், எபிசியோட்டமி, குடம், பிறகும், அடையும், நிமிடங்கள், முடியாது, இதயத், இதயத்துடிப்பு, திக், ஏற்றப்படும், அங்கே, contraction, சுருக்கத்துடன், கருப்பைக், கழுத்து, நிகழும், cervical, பெறும், labour, எவ்வாறு, section, வயிற்று, வந்து, வலியை, நிகழ்ந்து, கருவுற்ற, பின், எனப்படும், ஏற்படும், எழும்பும், நீங்கள், மூன்று, வேதனை, கணிக்கப்படும், கர்ப்பகாலம், தாயானவள், கருப்பை, சிறு, கூடும், காணப்படும், விரிய, பன்னீர்