உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
வாக்கு ஆகாயம் இடமா வந்து வசனிக்குக்கால் போக்கு ஆரும் காற்று இடமாப் புல்கி அனல் - ஏற்கும் இடும்பை குதம் நீர் இடமா மலாதி விடும்பார் இடம் உபத்தம் விந்து. | 16 |
அந்தக் கரணம் அடைவே உரைக்ககேள் அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் - சிந்தை இவை பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்து அங்கு உற்றது சிந்திக்கும் உணர். | 17 |
ஓதியிடும் நால் ஆறும் உற்று ஆன்ம தத்துவம் என்று ஆதி அருள்நூல் அறையும்காண் - தீது அறவே வித்தியா தத்துவங்கள் தம்மை விளம்ப்பக்கேள் உத்தமனே! நன்றாய் உனக்கு. | 18 |
வித்தியா தத்துவம்
காலம்நியதி கருதும் கலைவித்தை ஏல இராகம் புருடனே மாயை - மால் அறவே சொன்னோம் அடைவாகச் சொன்ன இவை தம் உண்மை உன்னி உரைக்க நாம் உற்று | 19 |
எல்லை பலம் புதுமை எப்போதும் நிச்சயித்தல் அல்லல் தரும் கிரியை ஆன்மாவுக்கு - ஒல்லை அறிவு ஆசை ஐம்புலனும் ஆரவரும் காலம் குறியா மயக்கு என்று கொள். | 20 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், உண்மை, நூல்கள், சாத்திரங்கள், சித்தாந்த, விளக்கம், அறவே, வித்தியா, தத்துவம், இலக்கியங்கள், இடமா, உற்று