உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
முத்திதனில் மூன்று முதலும் மொழியக்கேள் சுத்த அனுபோகத்தைத் தூய்த்தல் அணு - மெத்தவே இன்பம் கொடுத்தல் இறை இத்தை விளைவித்தல் மலம் அன்புடனே கண்டுகொள், அப்பா! | 51 |
குரு லிங்க சங்கம வழிபாடு
அப்பா! இம்முத்திக்கு அழியாத காரணம்தான் செப்பாய் அருளாலே செப்பக்கேள் - ஒப்புஇல் குருலிங்க வேடம் எனக் கூறில் இவை கொண்டார் கரு ஒன்றி நில்லார்கள் காண். | 52 |
கற்றா மனம்போல் கசிந்துகசிந்தே உருகி உற்று ஆசான் லிங்கம் உயர்வேடம் - பற்று ஆக முத்தித் தலைவர் முழுமலத்தை மோசிக்கும் பத்திதனில் நின்றிடுவர் பார். | 53 |
வாழ்ந்தேன் அருட்கடலே! வற்றாப் பவக்கடலில் வீழ்ந்தே அலையாமல் மேதினியில் - சூழ்ந்துவிடா வெண்ணெய்ச் சுவேதவன மெய்கண்ட நாதனே! உண்மைத் தவப்பயனே உற்று. | 54 |
உண்மை விளக்கம்
முற்றிற்று
தேடல் தொடர்பான தகவல்கள்:
உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், விளக்கம், உண்மை, சாத்திரங்கள், சித்தாந்த, உற்று, இலக்கியங்கள், அப்பா