திருவுந்தியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சாவிபோ மற்றச் சமயங்கள் புக்குநின் றாவி யறாதேயென் றுந்தீபற அவ்வுரை கேளாதே யுந்தீபற. | 31 |
துரியங் கடந்தவித் தொண்டர்க்குச் சாக்கிரந் துரியமாய் நின்றதென் றுந்தீபற துறந்தா ரவர்களென் றுந்தீபற. | 32 |
பெற்றசிற் றின்பமே பேரின்ப மாயங்கே முற்ற வரும்பரி சுந்தீபற முளையாது மாயையென் றுந்தீபற. | 33 |
பேரின்ப மான பிரமக் கிழத்தியோ டோரின்பத் துள்ளானென் றுந்தீபற உன்னையே * யாண்டானென் ருந்தீபற. | 34 |
* ஆண்டதென் |
பெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய்போலக் கண்டாரே கண்டாரென் றுந்தீபற காணாதார் காணாரென் றுந்தீபற. | 35 |
நாலாய பூதமு நாதமு மொன்றிடின் நாலா நிலையாமென் றுந்தீபற நாதற் கிடமதென் றுந்தீபற. | 36 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவுந்தியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், றுந்தீபற, நூல்கள், சித்தாந்த, சாத்திரங்கள், திருவுந்தியார், பேரின்ப, இலக்கியங்கள்