திருவுந்தியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
உழவா துணர்கின்ற யோகிக ளொன்றோடுந் * தழுவாமல் நிற்பரென் றுந்தீபற * * தாழ்மணி நாவேபோ லுந்தீபற. | 16 |
* தழுவாது; | |
* * தாழ்ந்த மணி நாப்போல் |
திருச்சிலம் போசை யொலிவழி யேசென்று நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற நேர்பட வங்கேநின் றுந்தீபற. | 17 |
மருளுந் தெருளு மறக்கு மவன்கண் அருளை மறவாதே யுந்தீபற அதுவேயிங் குள்ளதென் றுந்தீபற. | 18 |
கருது * வதன்முன் கருத்தழியப் பாயும் ஒருமகள் கேள்வனென் றுந்தீபற உன்ன வரியனென் றுந்தீபற. | 19 |
* அதன்முன்னங் |
இரவு பகலில்லா வின்ப வெளியூடே விரவி விரவிநின் றுந்தீபற விரைய விரையநின் றுந்தீபற. | 20 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவுந்தியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், றுந்தீபற, நூல்கள், சாத்திரங்கள், திருவுந்தியார், சித்தாந்த, இலக்கியங்கள்